ஜூலை 7 முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் துபாய்.. என்ன நடைமுறை?
துபாய்: ஜூலை மாதம் 7ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க, துபாய் அரசு முடிவு செய்துள்ளது. துபாய் நாட்டின் குடியுரிமை விசா வைத்துள்ளோர், ஜூன் 22ஆம் தேதி திங்கள்கிழமை முதல் அந்த நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட கெடுபிடிகள் துபாயில் குறைக்கப்பட தொடங்கியுள்ளன. இது குறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 22ஆம் தேதி முதல் துபாய் குடியிருப்பு விசா வைத்துள்ள வெளிநாட்டினர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக புதிய அறிவிப்பு அமைந்துள்ளது. எமிரேட் விமான நிலையங்கள் திங்கள்கிழமை (ஜூன் 22) முதல் குடியிருப்பாளர்களை திரும்ப பெறத் தொடங்கும் என்று துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை குழு நேற்று அறிவித்தது.

பிற நாடுகளுக்கு பயணம்
ஜூன் 23ஆம் தேதி முதல் துபாய் குடியிருப்புவாசிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். அந்த நாடுகள் இவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இந்த பயணத்துக்கு துபாய் ஆட்சேபம் தெரிவிக்காது. அதேபோல ஜூலை 7ம் தேதி முதல், பிற நாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளை துபாய் அனுமதிக்கும்.

சுற்றுலா பயணிகள்
துபாய் குடியிருப்பு விசா வைத்துள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சுய அறிவிப்பு விண்ணப்பத்தை நிரப்பி கொடுக்க வேண்டும். மேலும் அவர்களது விமான சேவை நிறுவனம் இவர்களுக்கு அறிகுறி இருக்கிறதா என்பதைப் பார்த்து அழைத்து வருவதற்கும் அவர்களை அழைத்து வராமல் நிராகரிப்பதற்கு ம் அதிகாரம் கொண்டுள்ளது.

துபாய் விமான நிலையம்
துபாய் விமான நிலையம் வந்ததும், அனைத்து பயணிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் குடியிருப்புவாசிகள் தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் ஆப் மூலமாக பதிவு செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு வெளியாகும்வரை குடியிருப்பாளர்கள், அவர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நிறுவன தனிமை
பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். ஒருவேளை நெருக்கமான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் குடியிருப்போராக இருந்தால், அல்லது தனிமை வசதியை ஏற்படுத்துவதற்கு போதிய வசதி இல்லாத வீட்டில் இருப்பவராக இருந்தால், அவர்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். இவ்வாறு துபாய் அரசு அறிவித்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications