Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா இயக்குநர் துபாய் போலீசாரால் கைது.. இன்டர்போல் உதவியுடன் ராஜசேகரை தூக்கிய தமிழக போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆருத்ரா மோசடி வழக்கில், துபாயில் தலைமறைவாக இருந்த ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை அடிப்படையில் துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடி கோடியாக பணம் பெற்றுவிட்டு கம்பி நீட்டியது. இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து பணத்தைப் பறிகொடுத்தனர்.

Dubai police arrested Rajasekar who was absconding in Dubai after Aarudhra fraud

ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். மாநில பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு ஹரீஷ் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆருத்ரா மோசடியில் பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.

ஆருத்ரா நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், மகாலட்சுமி, மைக்கேல் ராஜ், நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாகி இருப்பதால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கினர்.

மேலும், இண்டர்போல் உதவியுடன் துபாய் போலீசாரிடம் பேசி, ஆருத்ரா நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க தமிழநாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், அபுதாபியில் தலைமறைவாக இருந்து வந்த ராஜசேகர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் அதன் இயக்குநர்கள் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், இண்டர்போல் உதவியுடன் அபுதாபியில் வைத்து ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+