முழுவதும் உள்நாட்டு தயாரிப்பு.. விபத்தில் சிக்காத தேஜஸ்.. துபாயில் விழுந்து நொறுங்கியது ஏன்?
அபுதாபி: துபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானமான தேஜஸ் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் விமானி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவில் இந்த விமானம் விபத்தில் சிக்கவில்லை. அப்படி இருக்கையில் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று கேள்வி எழுந்திருக்கிறது.
துபாய் விமான கண்காட்சியின் வான்வழி சாகசத்தில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானம், செங்குத்தாக கீழ் நோக்கி பாய்ந்து, கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்த இந்திய விமானப்படை விசாரணையை தொடங்க இருக்கிறது.

தேஜஸ் விமானம் லைட் காம்பேக்ட் வகை விமானமாகும். இதன் வடிவமைப்பு, அசெம்பிள் என அனைத்தும் உள்நாட்டிலேயே செய்யப்படுகிறது. என்ஜின் மட்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த விமானத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் மற்றும் டெவலப்மென்ட் ஏஜென்சி இணைத்து தயாரித்திருக்கிறது. இதில் ஒரே ஒரு இருக்கைதான் இருக்கும். அதேபோல என்ஜினும் ஒன்றுதான். விமானப்படை மட்டுமல்லாது கடற்படையிலும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2001ம் ஆண்டு முதல்முதலாக தேஜஸ் விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு 2016ல் முழுமையாக விமானப்படை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை ஒரே ஒருமுறை மட்டுமே இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜஸ்தான் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இப்படியாக இந்த விமானத்தின் மீது பிளாக் மார்க் ஏதும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் துபாயில் விபத்தில் சிகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான கட்டுப்பாட்டு அமைப்பில் மின்னணு அல்லது சாஃப்வேரில் கோளாறு ஏற்பட்டு அது Fly by wire அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது. ராஜஸ்தான் விபத்திலும் இதுதான் நடந்தது. விமானத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் இந்த Fly by wire அமைப்பு. இதில் பழுது ஏற்பட்டால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications