ஈரான் தாக்குதலால் துபாயில் பெரும் தீ விபத்து.. ஏர்போர்ட் அருகே பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு
துபாய்: துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்திய நேரப்படி இன்று காலை ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. எண்ணெய் சேமிப்பு ஒன்றில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தீயை துபாய் தீயணைப்பு படைஅதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாக விரைந்துள்ளனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் 1,800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. இதன் மூலம் அமீரகம் மிக அதிக அளவில் இலக்கு வைக்கப்பட்ட நாடாக மாறியிருக்கிறது. வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான தாக்குதல்களை முறியடித்திருந்தாலும், இந்தத் தொடர் தாக்குதல்கள் வளைகுடாவின் மிக முக்கியமான வர்த்தக மையமான துபாயின் பயணப் போக்குவரத்தைப் பாதித்துள்ளன.

அமெரிக்க-இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் பதிலுக்கு ஈரான் வளைகுடா பகுதி முழுவதும் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் வசதிகள் உள்ளிட்ட சிவிலியன் இடங்களை இலக்கு வைத்து வருகிறது. இதற்கிடையில், இந்த மோதல் தொடங்கியதில் இருந்து நான்கு பொதுமக்கள் மற்றும் இரண்டு ராணுவத்தினர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.. இதில் ராணுவத்தினர் இருவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
இதனிடையே துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்திய நேரப்படி இன்று காலை ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. எண்ணெய் சேமிப்பு ஒன்றில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தீயை துபாய் தீயணைப்பு படைஅதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாக விரைந்துள்ளனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் தனது எக்ஸ்தளத்தில், "துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளது. துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. பின்னர் அந்த அலுவலகம் வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலில், "விமான நிலையப் பகுதியில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீதான தாக்கத்தால் ஏற்பட்ட தீயை துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, துபாய் சிவில் டிஃபென்ஸின் அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், எந்தவித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் கூறியிருந்தனர். குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினார்கள்.
துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தொடர்பான அச்சுறுத்தல் பதிவாவது இது முதல் முறையல்ல என்று குறிப்பிட்ட அதிகாரிகள், பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு? -
பெரிய கேஸ் கிடங்கை காலி செய்த ஈரான்.. . Persona Non Grata-வை அறிவித்த கத்தார்.. அப்படினா என்ன? -
ஈரான் கொடூர ‘அட்டாக்’.. உலகிலேயே மிகப்பெரிய கத்தார் எல்என்ஜி கேஸ் ஆலையில் ஏவுகணை தாக்குதல் -
"ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!" லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான் -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி -
துபாயை மட்டும் தொடர்ந்து தாக்குவது ஏன்? ஈரானுக்கும் - அமீரகத்துக்கும் என்ன தான் பிரச்சனை! முழு விவரம் -
சவுதிக்கு வார்னிங்! மருந்து மூல பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளிலிருந்து வெளியேறுங்கள் - ஈரான் -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு














Click it and Unblock the Notifications