ஈரான் தாக்குதலால் துபாயில் பெரும் தீ விபத்து.. ஏர்போர்ட் அருகே பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு
துபாய்: துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்திய நேரப்படி இன்று காலை ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. எண்ணெய் சேமிப்பு ஒன்றில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தீயை துபாய் தீயணைப்பு படைஅதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாக விரைந்துள்ளனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் 1,800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. இதன் மூலம் அமீரகம் மிக அதிக அளவில் இலக்கு வைக்கப்பட்ட நாடாக மாறியிருக்கிறது. வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான தாக்குதல்களை முறியடித்திருந்தாலும், இந்தத் தொடர் தாக்குதல்கள் வளைகுடாவின் மிக முக்கியமான வர்த்தக மையமான துபாயின் பயணப் போக்குவரத்தைப் பாதித்துள்ளன.

அமெரிக்க-இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் பதிலுக்கு ஈரான் வளைகுடா பகுதி முழுவதும் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் வசதிகள் உள்ளிட்ட சிவிலியன் இடங்களை இலக்கு வைத்து வருகிறது. இதற்கிடையில், இந்த மோதல் தொடங்கியதில் இருந்து நான்கு பொதுமக்கள் மற்றும் இரண்டு ராணுவத்தினர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.. இதில் ராணுவத்தினர் இருவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
இதனிடையே துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்திய நேரப்படி இன்று காலை ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. எண்ணெய் சேமிப்பு ஒன்றில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தீயை துபாய் தீயணைப்பு படைஅதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாக விரைந்துள்ளனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் தனது எக்ஸ்தளத்தில், "துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளது. துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. பின்னர் அந்த அலுவலகம் வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலில், "விமான நிலையப் பகுதியில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீதான தாக்கத்தால் ஏற்பட்ட தீயை துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, துபாய் சிவில் டிஃபென்ஸின் அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், எந்தவித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் கூறியிருந்தனர். குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினார்கள்.
துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தொடர்பான அச்சுறுத்தல் பதிவாவது இது முதல் முறையல்ல என்று குறிப்பிட்ட அதிகாரிகள், பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ரூ.1.7 கோடி சம்பளம்.. "ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டாம்.." பெண் பைலட் பகிர்ந்த ரகசியம்! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
சேலம் மக்களுக்கு ஜாக்பாட்.. 210 ஏக்கர் நிலம் ரெடி பண்ணுங்க..!கோயம்புத்தூர் உடன் நேருக்குநேர் போட்டி? -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
பெரிய சதி.. அதானியின் ஒப்பந்தத்தை கைப்பற்றிய சீன நிறுவனம்! பின்னணியில் இவ்வளவு நடந்து இருக்கா?











Click it and Unblock the Notifications