துபாயில் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா.. மைவண்ணன் இராமகாவியம் புத்தக வெளியீடு
அமீரக எழுத்தாளர்கள்/வாசகர்கள் குழுமத்தின் சார்பில் முப்பெரும் விழா துபாய் அவானி ஹோட்டலில் 18-06-2022 மாலை 7:00 மணி அளவில் நடைபெற்றது.
துபாய்: காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் "மைவண்ணன் இராம காவியம்" என்ற காவியத்தை அமீரக திமுகவின் தலைவர் எஸ்.எஸ். மீரான் வெளியிட தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமான கல்லிடைக்குறிச்சி முகம்மது மொய்தீன் பெற்று கொண்டார்.
தமிழ்நாட்டைச் சார்ந்த இணையவெளியில் புத்தகங்களை விற்பனை செய்யும் Galaxy Book Sellers & Publishers (www.galaxybs.com) என்ற நிறுவனத்தின் தொடக்கவிழாவும், Galaxy Book நிறுவனத்தின் முதல் வெளியீடாக இலங்கையைச் சார்ந்த தமிழ் ஆளுமை "காப்பியக்கோ" ஜின்னாஹ் ஷரீபுத்தீன் எழுதிய "மைவண்ணன் இராமகாவியம்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், குழுமத்தைச் சார்ந்த தொழில் அதிபர் திருமதி ஜெஸிலா பானு எழுதிய "வேற்று திசை" சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக் கூட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றன.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில், செல்வி. சாருமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.
Galaxy Book Sellers & Publishers நிறுவனத்தின் தொடக்க நிகழ்வாக, நிறுவனத்தின் வணிக இணையத்தளத்தை (www.galaxybs.com) தேவதர்ஷினி பாலாஜி தொடங்கி வைத்தார். Galaxy நிறுவனம் குறித்த அறிமுக உரையையும், நிறுவனத்தின் வணிக நோக்கத்தையும் குறித்து ஜெஸிலா பானு நிகழ்த்தினார்.
அடுத்த நிகழ்வாக 'காப்பியக்கோ' ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் "மைவண்ணன் இராம காவியம்" என்ற காவியத்தை அமீரக திமுகவின் தலைவர் எஸ்.எஸ். மீரான் வெளியிட தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமான கல்லிடைக்குறிச்சி முகம்மது மொய்தீன் பெற்று கொண்டார். நூல் குறித்தும், நூலாசிரியர் குறித்தும் எழுத்தாளர் திரு. ஆசிப் மீரான் திறனாய்வு நோக்கில் விரிவாக உரையாற்றினார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசீன், தொழில் அதிபர்கள் ரமேஷ் ராமகிருஷ்ணன், முகமது இக்பால், பிலால் அலியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு Galaxy Book நிறுவனத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வாக வேற்றுதிசை சிறுகதை தொகுப்பின் விமர்சனக் கூட்டம் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் சார்பில் விரிவாக திறனாய்வு செய்யப்பட்டது. நூலின் ஆசிரியர் ஜெஸிலா பானு விமர்சன கூட்ட ஏற்புரை நிகழ்த்தினார்.
முப்பெரும் விழா நிகழ்வை வானொலி அறிவிப்பாளர் RJ அஞ்சனா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக எழுத்தாளர் குழுமத்தின் சார்பில் ஆசிப்மீரான், ஜெஸிலா பானு, பிலால் அலியார், ஃபிர்தவ்ஸ் பாசா, கவுசர், புகைப்பட கலைஞர் சுப்ஹான், FJ Tours ரியாஸ் போன்றோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர். Galaxy நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி பாஸ்கரன் நன்றியுரை வழங்கினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications