நீலகிரி தொடங்கி மதுரை வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி தொடங்கி மதுரை வரை 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக கத்திரி வெயில் தொடங்கிவிட்டால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். தார் ரோடே உருகி ஓடும் அளவுக்கு வெயில் இருக்கும். ஆனால், இப்போது மழை பரவலாக பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், தஞ்சை, நாகை, திருவாரூர் என டெல்டா மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்றும் நாளையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மே.19ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழையின் தாக்கம் இருக்கும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பொறுத்தவரையில், இன்று (17-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications