சவுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை தாக்கிய ஈரான்.. இந்த முறை சேதம் கொஞ்சம் அதிகம்!
துபாய்: சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான, பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் சுமார் 10 அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலை விட, இந்த தாக்குதல் கொஞ்சம் அதிரடியாகவே இருந்திருக்கிறது. மட்டுமல்லாது, போர் தொடங்கியதிலிருந்து இந்த விமானப்படைத் தளம் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காயமும் உயிரிழப்பும்
காயமடைந்தவர்களில் இருவர் மிகக் கடுமையாகவும், 8 பேர் தீவிர காயங்களுடனும் இருப்பதாக அமெரிக்கப் படை தெரிவித்தது. அமெரிக்கா-ஈரான் மோதலில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படை வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் பணிக்குத் திரும்பிவிட்டனர். 13 பேர் உயிர் நீத்துள்ளனர்.
தரைப்படைகளை அனுப்பும் அமெரிக்கா
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்கு எதிரான போரில் தரைப்படைகள் இல்லாமல் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார். ஆனால், மோதலுக்கு மத்தியில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், மேற்கு ஆசியாவிற்கு கூடுதல் படைகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
மார்கோ ரூபியோ சொன்னது என்ன?
ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, ஈரான் அணு ஆயுதங்களைத் தடுக்கும் வகையில் அதன் அனைத்து இராணுவத் திறன்களையும் அமெரிக்கா அழிக்கும் என்றார். "கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை ஏவுதளங்களைப் பெரிய அளவில் அழிப்போம், இதனால் அவர்கள் அணு ஆயுதத்தைப் பெற முடியாது. இலக்குகளை அடைந்து வருகிறோம். காலக்கெடுவை விட முன்னதாகவே செல்கிறோம், தரைப்படைகள் இல்லாமல் இதை அடைய முடியும்" என்று கூறியிருக்கிறர்.
போர் எப்போது முடியும்?
இப்போர் மாதக்கணக்கில் நீடிப்பதற்குப் பதிலாக சில வாரங்களிலேயே முடிந்துவிடும் என்றும் ரூபியோ நம்பிக்கை தெரிவித்தார். ரூபியோவின் இக்கூற்று, மேற்கு ஆசியாவில் 1,000க்கும் மேற்பட்ட வீரர்களை அமெரிக்கா பணியமர்த்தும் என்ற செய்திகளுக்குப் சில நாட்களுக்குப் பின்னரே வந்தது.
அமெரிக்காவின் வியூகம்
சிஎன்என், இரு ஆதாரங்களை மேற்கோள்காட்டி, அமெரிக்க இராணுவத்தின் 82வது ஏர்போர்ன் பிரிவின் துருப்புகள் விரைவில் அங்கு அனுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிட்டது. 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', அமெரிக்கப் போர் மந்திரிசபை அதிகாரியை மேற்கோள்காட்டி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், 82வது ஏர்போர்ன் பிரிவு தவிர்த்து, காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் உட்பட 10,000 கூடுதல் தரைப்படைகளை மேற்கு ஆசியாவுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
-
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை!












Click it and Unblock the Notifications