இனி அடிப்படை சம்பளமே ரூ.1.48 லட்சம்.. துபாயில் வந்த மிக முக்கிய மாற்றம்! இந்தியர்கள் சம்பளம் உயருமா?
சென்னை: எவ்வளவு சம்பளம் வந்தாலும் கூட பணத்தை சேமிக்கவே முடியவில்லை என்று பலரும் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். ஊதிய உயர்வு, போனஸ் என எது வந்தாலும் இந்த டயலாக் மட்டும் மாறாது. இப்படிப் பணத்தைச் சேமிக்க முடியாமல் சிரமப்படும் நபராக நீங்கள் இருந்தால்.. அதை எப்படி மாற்றி பணத்தைச் சேமிக்கலாம் என்பது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம்!
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் நல்ல கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் சென்று அவ்வளவு பணம் சேமித்துள்ளீர்கள் எனக் கேட்டால்.. அட நீங்க வேற பாஸ்.. மாசக் கடைசியிலேயே பணம் இருக்காது என்ற பதிலே வரும். நிச்சயம் உங்களுக்குத் தெரிந்த சிலர் அல்லது நீங்களே கூட இந்தச் சிரமத்தை எதிர்கொண்டு இருக்கலாம்.

ஓவர் செலவுகள்
இதுபோல ஓவர் செலவு செய்ய ஆன்லைனில் அல்லது கடைகளில் நாம் பார்க்கும் பொருட்களை எல்லாம் உடனடியாக வாங்குவதே பிரதானக் காரணம். கம்மி ரேட் கொண்ட பொருளாக இருந்தாலும் கூட அதுபோல ஒரு 10- 20 பொருளை வாங்கினாலே அது பெரிய தொகையைக் காலி செய்துவிடும். ஒரு ஆர்வத்தில் வாங்கிவிட்டு, பிறகு யூஸ் செய்யாமல் போட்டுவிடுவோம். இது நமக்கு நிதி ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தச் சிக்கலைச் சரி செய்யவே 30 நாள் விதி உள்ளே வருகிறது.
30-நாள் விதி
30-நாள் விதி என்பது பணத்தைச் சேமிக்க உதவும். நாம் பணத்தைச் செலவழிப்பதற்கு முன் தீவிரமாக யோசிக்க உதவும் ஒரு எளிய பழக்கமாகும். இது மண்டையைப் பிளந்து யோசித்து அமல்படுத்தச் சிக்கலான விதிமுறைகள் எல்லாம் இல்லை. மிகவும் எளிமையானது. இதன் காரணமாகவே பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் இந்த விதியைப் பரிந்துரைக்கிறார்கள்.
இதன் ரூல்ஸ் ரொம்பவே எளிமையானது.. அடிப்படைத் தேவைகளைத் தாண்டி அத்தியாவசியமற்ற ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற யோசனை வந்தவுடன், அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பொருளின் பெயர், விலையை நோட் செய்து வைக்கவும். மேலும், அந்த பொருளைக் கண்ட தேதியையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
என்ன செய்ய வேண்டும்
பிறகு 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகும், அந்தப் பொருள் உங்களுக்குத் தேவை என்றும் பட்ஜெட்டிற்குள் பொருந்துகிறது என்றும் நீங்கள் கருதினால் அப்போது அந்தப் பொருளை நீங்கள் வாங்கலாம். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் 30 நாட்களில் ஆசை மறைந்துவிடும், பணமும் மிச்சமாகும். அரிதாகச் சில பொருட்களை மட்டுமே 20 நாட்களுக்குப் பிறகும் நாம் வாங்குவோம். இதனால் பணத்தைச் சேமிக்க இது உதவும்.
ஒரு பொருளை வாங்கலாம் என நாம் யோசிப்பதற்கும், அதைப் பணம் செலவழித்து வாங்குவதற்கும் இடையே அதிகக் கால அவகாசத்தை உருவாக்குவதே இந்த விதியின் நோக்கமாகும். இதன் காரணமாக அவசரப்பட்டு தேவையில்லாத பொருட்களை நாம் வாங்குவது கணிசமாகக் குறைகிறது.
ரொம்ப ஈஸி
திட்டமிடாமல் ஒரு பொருளைப் பார்த்தால், உடனே வாங்குவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, அதன் பெயர், விலை, அது எங்குக் கிடைக்கிறது (ஆன்லைனில் எனில் லிங்க்) போன்ற விவரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, அங்கிருந்து அமைதியாக நகர்ந்துவிடுங்கள். அடுத்த 30 நாட்களுக்குக் காத்திருங்கள். இது உங்கள் பட்ஜெட்டிற்குள் பொருந்துகிறதா? இதை வாங்கினால் சேமிப்பு பாதிக்கப்படுமா.. இதைப் பொருள் வேறு இடத்தில் விலை குறைவாகக் கிடைக்குமா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
அடுத்து 30 நாட்களுக்குப் பிறகும் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என நீங்கள் யோசித்தால் தளமாக வாங்குங்கள். இந்தச் செயல்முறையைப் பின்பற்றினால் செலவு கணிசமாகக் குறையும். இதன் மூலம் உங்கள் சேமிப்பை நீங்கள் ஈஸியாக அதிகரிக்க முடியும்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications