ஈரோடு மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணி இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கோவை சரகத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவி ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவ்வப்போது நிர்வாக காரணங்களுக்காக மண்டல வாரியாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். பொதுவாக இன்ஸ்பெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குள் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். ஒரு காவல் சரகம் தாண்டி இன்னொரு காவல் சரகத்திற்கு அபூர்வமாகவே இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் அப்படி இல்லை.. தமிழ்நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதுதான் நடைமுறையாகும். அந்த வகையில் கோவை சரகத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.

8 police inspectors transferred in Erode district check details

அதன்படி ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவி ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த குருசாமி நீலகிரி மாவட்டம் ஊட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த லயோலா இன்னசி மேரி ஈரோடு மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பதி கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு சிறப்பு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பி.ஆர்.செந்தில்குமார் நீலகிரி மாவட்டம் தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமிர்தலிங்கம் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஏ.செந்தில்குமார் ஈரோடு சிறப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+