உலகத்தைவிட்டு சந்தோஷமாக போகிறோம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்துங்கள்..தற்கொலை செய்த காதல் ஜோடி உருக்கம்
Recommended Video

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சூரம்பட்டி வலக நேதாஜி வீதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் நந்தகுமார் (19). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் தொலைபேசி நிலையம் அருகே டீ கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் மகள் சத்யபிரியா (21).
நந்தகுமாரும் சத்யபிரியாவு்ம பேஸ்புக் மூலம் பழகினர். இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்கள் இருவரையும் உறவினர்கள் வீட்டுக்குள் சேர்த்து கொள்ளவில்லை.

கதவை தட்டியும் திறக்கவில்லை
பின்னர் வெள்ளகோவில் உப்புபாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நந்தகுமார் வேலைக்கு செல்லவில்லை என்பதால் டீக்கடை உரிமையாளர் அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்காததால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார்.

விஷ மருந்து
அப்போது நந்தகுமார் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். இதையடுத்து வெள்ளகோவில் போலீஸாருக்கு டீக்கடை உரிமையாளர் தகவல் கொடுத்தார். பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சத்யபிரியா தரையில் சடலமாக கிடந்தார். அவரது பக்கத்தில் விஷ மருந்து இருந்தது தெரியவந்தது.

தற்கொலை கடிதம்
இதையடுத்து இருவரது சடலத்தையும் காங்கேயம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் காதல் தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அன்புள்ள எங்கள் சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு பிரிகிறோம்.

ஆர்டிஓ விசாரணை
அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் சந்தோஷமாக செல்கிறோம். அதனால் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினால் போதும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications