ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விரலில் வைக்கும் மை அழியவில்லை.. அதிமுக வேட்பாளர் தென்னரசு!
வாக்காளர் விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என்று தென்னரசு கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களின் விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் நாகரீக அரசியலை தான் முன்னெடுப்போம் என்று கூறிய அவர், இடைத்தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களிக்க தொடங்கினர். மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம். மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுக குற்றச்சாட்டு
பொதுமக்கள் வாக்கு செலுத்த வசதியாக 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சில வாக்குச்சாவடிகள் அருகே திமுக - அதிமுக இடையே சிறு மோதல் ஏற்பட்டது. அதேபோல் இரு வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்தியவர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை அழிவதாகவும் அதிமுக தரப்பில் தேர்தல் அலுவலரிடம் புகாரளிக்கப்பட்டது.

வாக்கு மை அழியவில்லை
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, ஈரோடு கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தென்னரசு கூறுகையில், காலையில் இருந்தே மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். இதில் அதிமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை. ஈரோட்டில் நாகரீகமான அரசியல் தான் செய்யப்படும்.

தேர்தல் ஏற்பாடுகள்
திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும், அனாவசியமாக கடுஞ்சொல் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் நாகரீகமாக நடப்போம். சிறுசிறு சச்சரவுகள் தொண்டர்களிடையே வரும். தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களை வேகமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications