பாரத் பந்த்: இரு மாநில பேருந்துகள் ரத்து; தமிழக-கர்நாடக எல்லையில் வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்: டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழகம்- கர்நாடகா இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Recommended Video

    நாடு தழுவிய Bharat Bandh.. பேருந்துகள் ஓடவில்லை.. கடைகள், நிறுவனங்கள் அடைப்பு - வீடியோ

    மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

     Bharat Bandh: TN, Karnataka cancel govt Bus Operations

    இதற்கு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை முதல் சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

     Bharat Bandh: TN, Karnataka cancel govt Bus Operations

    இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பேருந்துகள் இன்று காலை இயக்கப்படவில்லை. இதனால் தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடி இன்று காலை முதல் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

     Bharat Bandh: TN, Karnataka cancel govt Bus Operations

    மேலும் சரக்கு வாகனங்களும் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. பாரத் பந்த் காரணமாக இரு மாநில எல்லையில் வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+