ஒருநாளும் சீமான் வெல்லப்போவதில்லை.. பிரபாகரனை முதலீடாக கொண்டு அரசியல் செய்கிறார்.. திருநாவுக்கரசர்!
பிரபாகரனை முதலீடாக வைத்து சீமான் அரசியல் செய்வதாக திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
ஈரோடு: பிரபாகரனை முதலீடாக வைத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் அரசியல் செய்து வருவதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். அதேபோல் எந்த காலத்தில் சீமான் வெற்றிபெறப் போவதில்லை என்று கூறிய திருநாவுக்கரசர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவுக்கு பின், ஈவிகேஎஸ் இளங்கோவனை இடைத்தேர்தலில் போட்டியிட வற்புறுத்தினோம்.

திருநாவுக்கரசர் பேட்டி
ஏனென்றால் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ள தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெறுவார். மக்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். இதில் திமுக கூட்டணி நிர்வாகிகள் பணியாற்றுவது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 24 மணி நேரமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை கண்காணித்து வருகிறார். அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், எம்எல்ஏ-க்கள் என அனைவருமே தங்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி
எதிர்காலத்தில் ராகுல் காந்தி தலைமையில் நல்லாட்சி அமைவதற்கான அஸ்திவாரத்தை இந்தத் தேர்தல் வெற்றி அமைக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரமாக இந்த இடைத்தேர்தல் வெற்றி இருக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இருக்கும் என்று தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள்
தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, நான் இதுவரை 45 ஆண்டு அனுபவ அரசியலில், ஏராளமான தேர்தலை சந்தித்துள்ளேன். தோல்வியை சந்திப்போம் என்று தெரிந்தவர்கள், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள். தோற்கப் போகும் நபர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதாக எப்போதும் குற்றச்சாட்டை வைப்பார்கள் என்று தெரிவித்தார்.

கர்நாடகா வனத்துறை
தொடர்ந்து, கர்நாடகா வனத்துறை தமிழக மீனவரை கொலை செய்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு, கர்நாடக வனத்துறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கடுமையான கண்டனத்துக்குரியது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு அதிக இழப்பீடு வழங்கி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுகவின் லட்சணம்
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசிய ஆடியோ வெளியாகி இருப்பது என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த லட்சணத்தில் அதிமுக தற்போதைய தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆடியோ வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார். பின்னர், பிரதமர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு, இந்தியாவை பொறுத்தவரை பாஜக இல்லா மாநிலத்தில் கூட காங்கிரஸ் கட்சி உள்ளது. எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளதால் காங்கிரஸ் இல்லாமல் எதிர்காலத்தில் ஆட்சி அமையாது. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்.

மோடிக்கு சிம்ம சொப்பனம்
அதே போன்று தான் மோடிக்கு மாற்றாக இருப்பவர் ராகுல்காந்தி என்பதை உணர்ந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்தி தான் கூட்டணி அமையும். இதனால் பொது வேட்பாளராக ராகுல்காந்தி தான் இருப்பார். அதானி விவகாரத்தில் இதுவரை நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதிலளிக்காமல் கிண்டல் செய்யும் வேலை செய்து வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு சிம்ம சொப்பனமாக ராகுல்காந்தி இருந்து வருவதால், அவரே பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று தெரிவித்தார்.

சீமான் பற்றி கருத்து
பின்னர் சீமான் பேச்சு பற்றிய கேள்விக்கு, சீமான் ஒரு விவகாரம் மட்டுமல்லாமல், ஏராளமான விவகாரங்களில் தவறாக தான் பேசி வருகிறார். அவருக்கான இளைஞர்களை வைத்து கொண்டும் பிரபாகரனை முதலீடாக வைத்து கொண்டு அரசியல் செய்து வருகிறார். இதனால் எந்த காலத்திலும் வெற்றி பெற போவதில்லை. பிரபாகரன் உயிரோடு இருப்பதாக யார் சொன்னாலும் நான் நம்ப தாயாராக இல்லை என்று தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications