ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வெற்றி உறுதி..அதிமுகவுக்கு இவ்வளவு தானா? ச ராஜநாயகத்தின் கருத்துக்கணிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்றும்.. அதிமுக 24.5 சதவீத வாக்குகள் பெறும் என்றும் ச ராஜநாயகம் என்ற பத்திரிக்கையாளர் மக்களிடம் ஆய்வு நடத்தி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
இதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிகவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அதன்படி நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் ஈரோட்டில் முகாமிட்டு தங்கள் கட்சிகளுக்காக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கருத்துக் கணிப்பு முடிவு
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளை மக்கள் ஆய்வு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் ச.ராஜநாயகம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் இடத்தில் காங்கிரஸ்
எங்கள் கள ஆய்வின் படி காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அதிமுக 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடம் பெற்றுள்ளது. தேமுதிக. 2 சதவீத வாக்குகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. தற்போது மவுனம் காத்து வரும் 21% வாக்காளர்களின் வாக்குகளையும் சேர்த்த கருத்துக் கணிப்பின் படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி 65 சதவீத வாக்குகளும் அதிமுக 41 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் 17 சதவீதம் மற்றும் தேமுதிக 4 சதவீத வாக்குகளையும் பெறும்.

நாம் தமிழர் கட்சிக்கு...
மவுன வாக்காளர்களின் பெரும்பான்மை வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்பட்சத்தில் மற்ற அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். அதிமுகவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் காங்கிரசின் வாக்கு வேறுபாடு குறையுமே தவிர, காங்கிரஸ் வெற்றியில் பாதிப்பு இல்லை. அதே சமயத்தில் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு 29.5 சதவீமும், காங்கிரஸ் கட்சிக்கு 28.5 சதவீதமும் அதிமுகவுக்கு 17 சதவீதமும், தேமுதிகவுக்கு 3 சதவீதமும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications