பெண்களுக்கு கடன் பாக்கி.. திமுக தேர்தல் அறிக்கையை காட்டி ஈரோடு கிழக்கில் எடப்பாடி பரபர பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஸ்டாலின் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார். ஆனால் இன்னைக்கு 22 மாதம் ஆகிவிட்டது. இதனால் 22 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேளுங்கள் என ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் திங்கள் கிழமை (பிப்.27) சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.













Click it and Unblock the Notifications