ரூ.40 இருந்தா குளிங்க.! இல்லனா இடத்தை காலி பண்ணுங்க.. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கறார்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ரூ.3 வசூலிக்க வேண்டிய குளியல் கட்டணம் ரூ.40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை பொய்த்தது, கொளுத்தி எடுத்த கோடை வெயில் காரணமாக தமிழகமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. ஏரிகள், குளங்கள், அணைகள் முக்கிய நீர் நிலைகள் என அனைத்துமே வறண்டு விட்டன.

ஈரோடு மாவட்டத்திலும் குடிநீர் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஈரோட்டில் தற்போது இது 3 நாளைக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை அரசின் கட்டண கழிப்பிடங்களையும் விட்டு வைக்கவில்லை. ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி கட்டண குளிப்பிடத்தில், நபர் ஒருவருக்கு மூன்று ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ரூ.40 கேட்பதால் வெளியூர் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த வெளியூர் பயணிகள், ஈரோடு மாநகராட்சியின் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றோம்.
வழக்கமாக ரூ.3 கேட்பார்கள், மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது எங்களுக்கும் தெரியும். வழக்கமாக வாங்குவதை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கலாம்.
ஆனால் குளிக்க போன இடத்தில் ரூ.40 தந்தால் தான் குளிப்பதற்கு அனுமதிக்க முடியும் என கறாராக கூறியதாக தெரிவித்தனர். குளிப்பதற்கு அதுவும் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் இவ்வளவு கட்டணமா என தாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டனர்.
இது குறித்து கட்டணம் வசூலிப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, தண்ணீர் தாங்கள் வெளியிலிருந்து வாங்குவதாகவும், இஷ்டமிருந்தால் இங்கு ரூ.40 கொடுத்து விட்டு குளித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் வாக்குவாதம் செய்யாமல் இடத்தை காலி செய்யுங்கள் என விரட்டியதாக வருத்தம் தெரிவித்தனர்.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள ஒப்பந்ததாரர் தரப்பு, மிக அதிக பணத்தை செலவு செய்து தண்ணீர் வாங்கி வைப்பதால் வேறு வழியின்றி குளியல் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக கூறியுள்ளது . ஆனால் இது குறித்து உரிய தகவல் ஏதும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications