மீதி சில்லறை கேட்ட முதியவரை கடுமையாக தாக்கிய ஈரோடு பஸ் கன்டக்டர் சஸ்பெண்ட்!.. பதைபதைக்கும் வீடியோ!
ஈரோடு: அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு கொடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Recommended Video
அரசுப் பேருந்தில் பயணித்த முதியவரிடம் பயணச்சீட்டு கொடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்து நடத்துனர், முதியவரை தாக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை நடத்தி தவறு இருப்பின் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோட்டிற்கு தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வாய் தகராறு
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் பேருந்து நடத்துநர் குமாரிடம் பயணச் சீட்டு வாங்கும்போது சில்லரை கொடுப்பதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதியவர்
அப்போது நடத்துனர் முதியவரை ஆத்திரத்துடன் தாக்கியுள்ளார். இந்த காட்சியை பேருந்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். மேலும் காசை வீசி எறிந்து பேருந்தை விட்டு கீழே இறங்குமாறும் அந்த நடத்துவர் கோபத்துடன் கூறுகிறார்.

சமூகவலைதளங்கள்
வயதில் பெரியவர் என்றும் பாராமல் முதியவரை நடத்துநர் ஒருமையில் பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பொதுமக்களும் அந்த நடத்துநரை சமாதானம் செய்து பெரியவரை அவ்வாறு பேச வேண்டாம் என அறிவுறுத்தினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடத்துநர் சஸ்பென்ட்
இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பவம் குறித்து விசாரித்து தவறு இருப்பின் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நடத்துநர் குமாரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications