ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 246 பேர் தபால் வாக்களித்தனர்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல் கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 246 பேர் இதுவரை தபால் வாக்களித்தனர். இத்தொகுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கிய தபால் வாக்குப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி களம் காண்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக vs நாம் தமிழர் கட்சி என நேரடி மோதல் நிலவுகிறது. தேர்தலைப் புறக்கணித்த அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா? அல்லது நோட்டாவுக்கு செலுத்தப்படுமா? என்பது எதிர்பார்ப்பு.
மேலும் தந்தை பெரியாரை மிக இழிவாகவும் ஆபாசமாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 2,529 பேர் உள்ளனர்; மாற்றுத் திறனாளிகள் 1,570 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்களில் 256 முன்கூட்டியே தபால் வாக்குகளைச் செலுத்த விண்ணப்பித்திருந்தனர்.
இதனையடுத்து முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அடையாள அட்டைகளை சரிபார்த்து மறைவிடம் ஒன்றில் வாக்குச் சீட்டில் வாக்குகளைப் பெற்றனர் தேர்தல் அதிகாரிகள். இந்த தபால் வாக்குகளைப் பெறும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் கொடுத்த 256 பேரில் மொத்தம் 246 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தபால் வாக்குகள் சீலிடப்பட்ட உறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது இந்த வாக்குகளும் எண்ணப்படும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications