ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்- 46 வேட்பாளர்கள் போட்டி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் களம் காண்கின்றனர். இத்தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த வெளிமாநிலத்தவர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளது. அதேபோல பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 8 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 47 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர்.












Click it and Unblock the Notifications