கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே 'உங்க அய்யாசாமி' தான் சார்.. போலீஸை அதிரவைத்த திருடர்கள்!
திருடர்களுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். வீடுகளில் கைவரிசை காட்டிய 3 பேர் சிக்கியிருக்கிறார்கள்.
ஈரோடு: திருடர்களுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்த போலீஸ்காரரை கைது செய்த போலீசார், அவரது ஆலோசனைப்படி வீடுகளில் கைவரிசை காட்டிய 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த 35 வயதாகும் ராஜீவ் காந்தி என்பவர், ஈரோடு ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அந்த பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த மளிகை கடை அருகே சந்தேகப்படும்படி சிலர் வந்து செல்வதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தார்கள்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறிய தகவல், போலீஸையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருட்டு வழக்கு
பிடிப்பட்ட மூன்று பேரில் ஒருவரான செந்தில்குமார் கூறிய தகவல் தான் போலீசாரை அதிர வைத்ததது. விசாரணையில் வெளியான தகவலை பார்ப்போம். நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த செந்தில்குமார் (30) என்பவர் இவரை கடந்த 2021-ம் ஆண்டு பெருந்துறை பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

என்னை வந்து பார்
பின்னர் வழக்கு விசாரணைக்கு செந்தில்குமாரை பெருந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அப்போது பாதுகாப்பிற்காக ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ்காந்தி சென்றுள்ளார். அப்போது, அவர் செந்தில்குமாரிடம், "போலீசாரிடம் சிக்காமல் திருட்டுகளை நடத்துவது எப்படி? என்பதை நான் சொல்லித் தருகிறேன். நீ தண்டனை முடிந்து, என்னை வந்து பார்" என்று கூறினாராம்.

திருட்டுக்கு ஆலோசனை
அதன்படி கடந்த ஆண்டு, சிறை தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் போலீஸ்காரர் ராஜீவ்காந்தியை, பெருந்துறையில் உள்ள அவரது மளிகை கடையில் வைத்து சந்தித்தாராம். அப்போது செந்தில்குமாருடன், மதுரை மேலூரை சேர்ந்த கருப்புசாமி (31), பாலசுப்பிரமணி (42) ஆகியோரும் சென்றுள்ளார்கள். அவர்கள் 3 பேரிடமும் போலீஸ்காரர் ராஜீவ்காந்தி, கொள்ளையடிப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வீடுகள் பற்றியும், அதிகம் போலீஸ் ரோந்து இல்லாத இடங்கள் குறித்தும் கூறியிருக்கிறார்

சிக்கிய ராஜீவ்காந்தி
அவரது ஆலோசனையின்படி பெருந்துறை, சித்தோடு உள்ளிட்ட இடங்களில் 3 பேரும் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தங்களுக்கு மூளையாக இருந்து, திருட்டுகளை எந்தெந்த இடத்தில் எப்படி நடத்துவது? என்று, தங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததே போலீஸ்காரர் ராஜீவ்காந்தி தான் என்று மூன்று திருடர்களும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜீவ்காந்தி, செந்தில்குமார், கருப்புசாமி, பாலசுப்பிரமணி ஆகிய 4 பேரையும் கைது செய்தார்கள். போலீஸ்காரரே திருடுவதற்கு திட்டம் போட்டுக்கொடுத்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications