ஈரோடு விவசாயிகளுக்கு வரும் வேளாண் அதிகாரி அழைப்பு.. அடுத்த நிமிடம் பறிபோகும் பணம்.. பின்னணி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் பணியாற்றுவதாக கூறி ஒருவர் விவசாயிகளிடம் அறிமுகமாகி, விவசாயிகளுக்கு அரசு மானியம் பெற்றுத்தருவதாகவும், வேளாண்மை மற்றும் துறை சார்ந்த அனைத்து நலத்திட்டங்கள், சலுகைகள் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளை பெற யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை..எனினும் சிலர் அரசு அதிகாரிகளின் பெயரை சொல்லி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. உடனே அரசின் மானியம் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபடுவது நடக்கிறது. ஈரோட்டில் அப்படி பலரிடமும் மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் பணியாற்றுவதாக கூறி ஒருவர் விவசாயிகளிடம் அறிமுகமாகி, விவசாயிகளுக்கு அரசு மானியம் பெற்றுத்தருவதாகவும், வேளாண்மை மற்றும் துறை சார்ந்த அனைத்து நலத்திட்டங்கள், சலுகைகள் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வருவதாக புகார்கள் வந்துள்ளன.
அந்த நபர் விவசாயிகளிடம் இருந்து அவரது சொந்த வங்கிக்கணக்கில் பணம் பெற்று உள்ளதும், அவர் விவசாயிகளை நேரடியாகவும், தொலைபேசி அழைப்பு மூலமாகவும் தொடர்பு கொண்டு விவசாயிகளிடம் பேசும்போது, அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய நபர்களின் பெயரையும் பயன்படுத்தி பணம் வசூலித்துள்ளதாக தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுபோன்ற மோசடி நபர்கள் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் எந்த ஒரு திட்டத்துக்கும் விவசாயிகள் பணம் செலுத்த வேண்டியதில்லை. எனவே விவசாயிகள் தனிப்பட்ட எந்த ஒரு அலுவலரின் வங்கிக்கணக்குக்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை. ரொக்கமாகவும் தொகை ஏதும் வழங்க வேண்டியதில்லை.
எனவே வேளாண்மை திட்டங்கள், மானியங்கள் குறித்த அனைத்து சந்தேகங்களையும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அதிகாரிகள், வேளாண் சார்ந்த துறை அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மோசடி நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் தொகை அல்லது வேறு வகையான ஆவணங்கள் ஏதும் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்" இவ்வாறு வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications