Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது திமுகவில் இணைந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி முடிந்தது.

https tamil oneindia com news new-york us-president-donald-trump-to-send-army-to-the-southern-border-against-illegal-aliens-672799 html

இந்த நிலையில் இந்த தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகிறார்கள். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தன.

இந்த நிலையில் அதிமுக நிர்வாகியான செந்தில் முருகன், இந்த தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்றைய தினம் கடைசி நாள் என்பதால் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் இன்றைய தினம், திமுகவில் இணைந்தார். வி.சி.சந்திரகுமாருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியமானார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது 3ஆவது முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.

இவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து 2023 ஆம் ஆண்டு இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் செந்தில் முருகனை வாபஸ் பெறுமாறு ஓபிஎஸ் தெரிவித்ததை அடுத்து அவர் வாபஸ் பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் செந்தில் முருகன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிமுக புறக்கணித்தாலும் மீண்டும் ஈரோடு கிழக்கு தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+