ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது திமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி முடிந்தது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகிறார்கள். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தன.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகியான செந்தில் முருகன், இந்த தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்றைய தினம் கடைசி நாள் என்பதால் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் இன்றைய தினம், திமுகவில் இணைந்தார். வி.சி.சந்திரகுமாருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியமானார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது 3ஆவது முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
இவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து 2023 ஆம் ஆண்டு இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் செந்தில் முருகனை வாபஸ் பெறுமாறு ஓபிஎஸ் தெரிவித்ததை அடுத்து அவர் வாபஸ் பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் செந்தில் முருகன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிமுக புறக்கணித்தாலும் மீண்டும் ஈரோடு கிழக்கு தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா












Click it and Unblock the Notifications