சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25 கி.மீ சுற்றளவுக்கு கடும் காட்டுத் தீ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
நேற்று இரவு சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுத் தீ மீண்டும் ஏற்பட்டது. இதில், ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 25 கி.மீ சுற்றளவுக்கு தீ பற்றி எரிவதால் அந்த பகுதியிலுள்ள வன விலங்குகள் இடம் பெயர்ந்து ஓடியுள்ளன.

இருப்பினும், இதுவரை கிடைத்த தகவல்படி, வன விலங்குகள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஏறத்தாழ வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வெற்றி பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில மணி நேரங்களில் காட்டுத் தீ அணைக்கப்படும் என உறுதியளிக்கிறார்கள் வனத்துறையினர்.












Click it and Unblock the Notifications