செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பேன்.. அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா தடாலடி!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன் என செங்கோட்டையனை இன்று சந்தித்த பின் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா பேட்டி அளித்துள்ளார். செங்கோட்டையன், தனது மனதில் இருப்பதை பேச உள்ளதாக அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்​திக்​கட​வு - அ​வி​நாசி திட்ட கூட்டமைப்பு சார்​பில் கடந்த பிப்​ர​வரி மாதம் அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமிக்கு அன்​னூரில் நடந்த பாராட்டு விழா​வில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்​கள் இடம்​பெறாததைக் கண்​டித்​து, முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி எம்​எல்​ஏவு​மான கே.ஏ.செங்​கோட்​டையன் விழாவைப் புறக்​கணித்​தார். தொடர்ந்​து, எடப்பாடி பழனி​சாமி​யின் பெயரை தவிர்த்து செங்​கோட்​டையன் பேசி​யது அவரது அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​யது.

Former AIADMK MP Sathyabama Backs Sengottaiyan to Join His September 5 Meeting Amid Party Buzz

அதிமுக தலைவர்களுக்கு கூட தெரியாமல் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதன்பின் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து பேசி இருந்தார். எனினும், அவரை சமா​தானப்​படுத்த கட்​சித் தலைமை எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது.

இந்​நிலை​யில், கோபி​யில் உள்ள தனது வீட்​டில் நேற்று காலை செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த செங்கோட்டையன், "கோபி​யில் வரும் 5 ஆம் தேதி காலை செய்​தி​யாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்​ளேன். அது​வரை பொறுமை காக்க வேண்​டும்" என்​றார். தொடர்ந்​து, கோபி​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் நிர்​வாகி​களு​டன் நீண்ட ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார்.

ஆலோ​சனைக் கூட்​டம் முடிந்து வெளியே வந்த செங்​கோட்​டையன், "உங்​களின் அனைத்து கேள்வி​களுக்​கும் 5 ஆம் தேதி விடை அளிக்​கப்​படும்" என்​றார். செங்​கோட்​டையனுக்​கும் அதி​முக தலை​மைக்​கும் இடையே ஏற்​பட்​டுள்ள முரண்​பாடு நீடித்து வரும் சூழலில் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்​ள​தாக செங்​கோட்​டையன் அறி​வித்​துள்​ளது அதி​முக வட்டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்​ளது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் இன்று ஆலோசனை நடத்தினார். 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனவர் சத்தியபாமா. அவர் இன்று செங்கோட்டையனைச் சந்தித்துப் பேசினார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்தியபாமா, "உடல்நிலை சரியில்லாததால் நேற்று செங்கோட்டையன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்த வெற்றியை நாம் அறுவடை செய்ய வேண்டும். 2026ல் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம்.

5 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்பேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே செங்கோட்டையனின் எண்ணம். எப்போதுமே அதைப்பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். கட்சி நலன் சார்ந்து 2026 தேர்தல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+