ஈரோடு மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மளிகை கடைகள் இயங்காது.. கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மளிகை கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூர், நாகப்பட்டினத்தில் தலா 7 பேருக்கும் , ஈரோட்டில் 6 பேருக்கும் சென்னையில் 5 பேருக்கும், செங்கல்பட்டு சேலத்தில் தலா 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில கொரோனா பாதித்தவர்க்ளின் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ஈரோட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் செயலாற்றி வருகிறது . மாவட்ட காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஞாயிறு, வெள்ளி மற்றும் புதன்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காய்கறிகளை ஒரே நேரத்தில் தேவையான அளவு வாங்கி வைத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கதிவரன் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே அரசு அனுமதித்த நேரத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 13 நபர்கள் இன்று குணம் அடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்ஆகியோர் மலர்கொத்து மற்றும் பழங்க கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications