ஏன் அவசரப்படுறீங்க? அவர்கிட்ட போய் கேளுங்கள்.. பட்டென சீறிய ஓபிஎஸ்.. என்னது சசிகலாவா? ட்விஸ்ட்
அதிமுக பொது வேட்பாளருக்கான பி பார்மில் கையெழுத்து போட என்னிடம் அனுப்பினால் நான் கையெழுத்து போடுவேன் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: இரட்டை இலை சின்னம் முடங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. இரட்டை இலை இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்,
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரிய பிளவை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது.இரண்டு தரப்பும் போட்டியிடுவதால் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதில் ஓ பன்னீர்செல்வம் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். நாளை இந்த வழக்கில் முக்கிய உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா
இந்த விவகாரத்தில் சசிகலா தலையிட உள்ளதாகவும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. விரைவில் ஓ பன்னீர்செல்வத்தை சசிகலா சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்திடம் சசிகலாவை எப்போது சந்திப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம்.. கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன். ஏன் அவசரப்படுகிறீர்கள். கண்டிப்பாக போய் பார்ப்பேன். எப்போது பார்ப்பேன் என்று சொல்லுவேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போய் பார்ப்பேன். உறுதியாக பார்ப்பேன்.

இரட்டை இலை
இரட்டை இலை சின்னம் முடங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. இரட்டை இலை இருக்க வேண்டும். அதிமுக சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். பி பார்மில் கையெழுத்து போட என்னிடம் அனுப்பினால் நான் கையெழுத்து போடுவேன். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். தொண்டர்கள் விருப்பமும் அதுதான். அதுவே நடக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா என்று விரைவில் அறிவிப்பு வரும். அதிமுக தொண்டர்கள், தமிழ்நாடு மக்கள், பாஜக என்று எல்லோரும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் என்றார்.

எடப்பாடி
இதையடுத்து எடப்பாடி பணிமனையில் பாஜகவை தவிர்த்து இருக்கிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், இதை என்னிடம் கேட்காதீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள். அவர்கள் ஏன் பாஜகவை தவிர்த்தார்கள் என்று தெரியவில்லை. அதில் நான் கருத்து சொல்ல மாட்டேன் . அவர்களிடமே போய் கேளுங்கள், எங்களை பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். அதன்படியே செயல்பட்டு வருகிறோம். எங்கள் வேட்பாளருக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு உள்ளது. எங்கள் வேட்பாளர் வலிமையான வேட்பாளர். நேற்றே சொல்லிவிட்டேன்.

பேனா
பாஜக வேட்பாளரை களமிறக்கினால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி நலனை மனதில் வைத்து செயல்படுவோம். கருணாநிதிக்கு பேனா வைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறேன். அதை பற்றிய வல்லுனர் கருத்துக்களை கேட்டு இருக்கிறேன். அந்த தகவல்கள் வந்ததும் கருத்து தெரிவிக்கிறேன். மீனவர்கள் கருத்துக்களையும் கேட்டு இருக்கிறேன். இதெல்லாம் முழுமையாக கிடைத்ததும் என் நிலைப்பாட்டை அறிவிப்பேன், என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications