தமிழகத்திற்கு கொரோனா வராது என்றீர்கள்... இப்போது வெட்டுக்கிளிகள் வராது என்கிறீர்கள் -கொங்கு ஈஸ்வரன்
ஈரோடு: கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது என்று சொன்னது போல வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டுக்கு வராது என்று தமிழக அரசு சொல்வது கவனக்குறைவை காட்டுவதாக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயத்தை அழிக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வெட்டுக்கிளிகள்
வெளிநாடுகளிலே அழிவை ஏற்படுத்துகின்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடமாநிலங்களை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறது. பல கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சாப்பிட்டே அழிக்கிறது.

தடுக்க முடியாது
பாதிக்கப்பட்ட குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்கள். கொரோனா பரவலில் இருந்து இந்தியா மீளாத நிலையில் வெட்டுக்கிளிகளுடைய தாக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மாநில மாவட்ட எல்லைகளை மூடியது போல தடுப்புகளை போட்டு வெட்டுக்கிளி பரவலை தடுக்க முடியாது.

200 கிமீ பயணிக்கும்
ஒரே நாளில் 200 கிலோமீட்டர் பயணம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்த வெட்டுக்கிளிகள் எவ்வளவு விரைவில் தமிழகம் வந்து சேர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திறமைவாய்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை போட்டும், வெளிநாடுகளில் வெட்டுக்கிளி பிரச்சினைக்கு எப்படி தீர்வு கண்டார்கள் என்பதை கேட்டறிந்தும் தீர்க்கமான திட்டங்களோடு இந்த அபாயத்திலிருந்து தமிழகத்தை காப்பாற்ற அரசு உடனடியாக அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

வலியுறுத்தல்
அதேசமயம் வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற தேவைப்படுகின்ற நிதியை தாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி தொடங்க வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications