அசைவே இல்லை.. உடம்பெல்லாம் ரத்தம்.. விடிகாலையில் அதிர்ந்து போன விவசாயி.. பதுங்கிய சிறுத்தைக்கு வலை
: பசுவை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்
ஈரோடு: தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.. இதையடுத்து, பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது தாளவாடி வனச்சரகம்.. இந்த வனப்பகுதியை சுற்றிலும், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.
கடந்த 2 வருடத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை இங்கு வந்துவிட்டது.. இங்குள்ள ஒரு கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

விவசாயிகள்
இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் தங்கள் புகார்களை தெரிவித்தனர்.. இதையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை அந்த கூண்டுகளில் சிக்கவே இல்லை.. கூண்டு வைக்காத பகுதிகளில் இருந்து தப்பித்து, கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

மாட்டு கொட்டகை
இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மானாவாரி விவசாயி ரங்கசாமி.. 45 வயதாகிறது.. இவர் 7 மாடுகளை வளர்த்து வருகிறார்.. இவரது வீடு மற்றும் மாட்டு கொட்டகை ஊரை ஒட்டியே உள்ளது.. வழக்கம்போல் மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டிவைத்து விட்டு, நேற்றிரவு தூங்க சென்று விட்டார்...

அதிர்ச்சி
விடிகாலையில் எழுந்து பார்த்தபோது தன்னுடைய பசுமாட்டின் கன்று அசைவற்று உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.. அந்த பசுமாட்டின் உடல் முழுதும் ரத்த காயங்கள் கிடந்தன.. இதைபற்றி உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

சிறுத்தை
சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர், கால்தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி பசுகன்று இறந்தது உறுதி செய்தனர்... தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கல்குவாரி அருகே கூண்டு வைக்கப்பட்டு உள்ளது... இருந்தாலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது..!
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications