தீபாவளிக்கு பிளான் எதுவும் இல்லை.. தானாகவே விற்பனை அதிகம் நடக்குது.. மது விலக்கு அமைச்சர் முத்துசாமி
ஈரோடு: தீபாவளிக்கு பிளான் எதுவும் பண்ணவில்லை என்றும் தீபாவளி பண்டிகை போன்ற கால கட்டங்களில் எல்லாவற்றிலுமே கூடுதல் வியாபாரம் ஆகிறது, தடுப்பதும் கடினம் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: - தீபாவளி பண்டிகை போன்ற கால கட்டங்களில் எல்லாவற்றிலுமே கூடுதல் வியாபாரம் ஆகிறது. நாங்கள் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தானாக நடக்கிறது. தடுப்பதும் கடினம். இதற்கு எப்படி பதில் சொல்வது என தெரியவில்லை. இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நாம் நினைக்க முடியாது. தீபாவளி நேரத்தில் என்ஜாய்மண்டிற்காக அந்த மாதிரி பண்ணுகிறார்கள் இருந்தாலும் எங்களின் வேண்டுகோள்..

அரசின் சார்பாக இது எல்லாம் தவிர்க்க வேண்டும் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமாக மக்களுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். கவுன்சிலிங் போன்ற நிறைய டீம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மது விற்பனையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறோம். வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது.
அதற்காக ஒரு நேரத்திலும் யாரும் பேசியது கிடையது. இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான எதுவும் திட்டங்கள் முடியுமா என்பது குறித்துதான் நாங்கள் பார்க்கிறோம். டெட்ரா பேக் பொறுத்தவரை மற்ற மாநிலங்களில் உள்ளது. அதில் சில நன்மைகள் விவசாயிகளுக்கு உள்ளது. எனவே அதைப்பற்றி ஆய்வு அறிக்கை கொடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மிக விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என வேல்முருகன் கூறியது பற்றி கேட்கிறீர்கள். மதுக்கடைகள் படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். இரண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணி கொண்டு போக வேண்டியுள்ளது. இந்த பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. எனவே குடிப்பழக்கம் உள்ளவர்களை மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை புதிதாக செய்து கொண்டு இருக்கிறோம். அது வெற்றி பெறும் போது இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்.
முழு நேரமும் டாஸ்மாக் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக எதாவது நடந்தால் மிகப்பெரும் தப்பு.. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெட்ரோ பேக் விவகாரத்தை பொறுத்தவரை குழு அறிக்கையை ஓரளவு கொடுத்து உள்ளது. முழு அறிக்கையையும் கொடுத்த பிறகு நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு அதற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications