Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு மாவட்டத்தையும் விடாத தமிழக அரசு.. அசத்தலாக நடக்கும் ஐடி புரட்சி! வருகிறது புது டைடல் பார்க்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: TIDEL நிறுவனம் ஈரோட்டில் புதிய TIDEL Neo பூங்காவை அமைக்க முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்திற்காக வடிவமைப்பு பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FATIA), ஈரோட்டில் புதிய நியோ-டைடல் பூங்கா அமைக்கும் மாநில அரசின் சமீபத்திய அறிவிப்பை வரவேற்றுள்ளது.

madurai

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் மற்றும் பொதுச் செயலாளர் பி. ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக எழுதிய கடிதத்தில், சமீபத்திய பட்ஜெட்டில் ஈரோட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் இந்த பூங்கா அமையவுள்ளதாகவும், இதன் மூலம் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அரசு அறிவித்திருந்தது குறித்து குறிப்பிட்டனர். "மாவட்டத்தில் அதிக பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், இந்த பூங்கா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்" என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் டைடல் பார்க்

இது போக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே எடப்பள்ளியில் எட்டு ஏக்கர் பரப்பளவில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்தப் பூங்கா சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டில் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் தொடங்கப்பட்டன. மேலும், தரமணி மற்றும் கோயம்புத்தூருக்குப் பிறகு, மாநிலத்தின் மூன்றாவது முழு அளவிலான டைடல் பூங்காவான ஆவடி பட்டாபிராம் டைடல் பூங்காவும் திறக்கப்பட்டது. தற்போது மதுரை, திருச்சி, திருப்பூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் திருவண்ணாமலையில் நியோ டைடல் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மினி டைடல் பார்க்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நீலகிரியில் அமையவுள்ள டைடல் பூங்கா, டிபிஎஃப்ஓடி (DBFOT) அடிப்படையில் 45 வருட சலுகை காலத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது. திருப்பூரில் உள்ள ராக்கியபாளையம் பகுதியில் சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட டைடல் நியோ பார்க் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நீலகிரி டைடல் பூங்கா குறித்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூரில் உள்ள 65,500 சதுர அடி பரப்பளவு கொண்ட டைடல் பூங்காவில், தற்போது இரண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. எதிர்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட ஐடி மற்றும் ஐடிஇஎஸ் (IT/ITeS) துறை வல்லுநர்கள் இங்கு பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "தமிழ்நாட்டில் முதல் டைடல் பூங்கா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப நிலப்பரப்பை மாற்றியது. அதேபோன்ற மாற்றம் இப்போது சிறிய நகரங்களில் டைடல் நியோ மூலம் நடைபெறுகிறது - அவை தங்கள் சொந்த ஊர்களில் மக்களுக்கு வேலைகளை வழங்குகின்றன" என்று சந்தீப் நந்தூரி குறிப்பிட்டார்.

டைடல் நியோ ஒரு புரட்சிகரமான திட்டம்

டைடல் நியோ ஒரு புரட்சிகரமான திட்டம் என்று குறிப்பிட்ட நந்தூரி, "இந்த முதலீடுகள் மூலம் பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்கிறோம். சிறிய நிறுவனங்கள் உயர்தர அலுவலக இடங்களை அணுக முடிகிறது. எனவே, இத்தகைய இடங்களுக்கான தேவை அதிகம். ஆக்கிரமிப்பிலும் டைடல் நியோ வெற்றி பெற்றுள்ளது," என்று மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதல் நியோ டைடல் பூங்கா விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கிராமத்தில் பிப்ரவரி 2024-ல் திறக்கப்பட்டது. இங்கு மூன்று நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன, சுமார் 200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களில் இந்த இடம் 100% ஆக்கிரமிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு தஞ்சாவூர், சேலம் மற்றும் தூத்துக்குடியில் இதேபோன்ற பூங்காக்களைத் திறந்தது. தஞ்சாவூரில் 100% ஆக்கிரமிப்பு உள்ளது. இங்கு நான்கு நிறுவனங்கள் செயல்படுகின்றன, 800 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், சேலம் மற்றும் தூத்துக்குடியிலும் 100% ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் ஐந்து நிறுவனங்கள் செயல்படுகின்றன, இங்கு 700 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தூத்துக்குடியில் இரண்டு நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன, இதுவரை 620 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஐ.டி. துறையின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது செயல்பட்டு வரும், கட்டப்பட்டு வரும், மற்றும் புதிதாக திட்டமிடப்பட்டுள்ள டைடல் (TIDEL) மற்றும் டைடல் நியோ (TIDEL Neo) ஐ.டி. பூங்காக்கள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சென்னை (தரமணி & ஆவடி) மற்றும் கோயம்புத்தூரில் டைடல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. டைடல் நியோ பூங்காக்கள் விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த பூங்காக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பூங்காக்கள் கட்டுமானத்தில் உள்ளன. ஓசூரில் ஒரு டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை நிறைவடையும் போது, தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் ஐ.டி. உள்கட்டமைப்பு மேலும் வலுப்பெறும். டைடல் நியோ மினி ஐ.டி. பூங்காக்கள் திருப்பூர், வேலூர், சிவகங்கை (காரைக்குடி) மற்றும் திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் திருப்பூர் மற்றும் வேலூர் பூங்காக்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இவை சிறிய நகரங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும்.

கரூர், நாமக்கல், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டங்கள் அல்லது ஒப்பந்தப்புள்ளி பணிகள் நடைபெற்று வருகின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு டைடல் அல்லது டைடல் நியோ ஐ.டி. பூங்கா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, திருச்சி மற்றும் ஓசூரில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாகி வரும் நிலையில், சேலம் மற்றும் வேலூரிலும் முழு அளவிலான டைடல் பூங்காக்களை தொடங்க வேண்டும்.

தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் மத்திய தர அளவிலான டைடல் பூங்காக்களை அமைக்கலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கம் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை இருப்பது போல, விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டைடல்/நியோ ஐ.டி. பூங்காவுடன் தமிழ்நாடு இந்தியாவின் ஒரே மாநிலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தின் தனித்துவமான வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+