விழுந்து விழுந்து வேலை செய்யும் போது செய்தி ஆவதில்லை.. ஆனால் நான் விழுந்தால்.. தமிழிசை ஆதங்கம்!
நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தியாவதில்லை. ஆனால் நான் விழுந்தால் பெரிய செய்தியாகிறது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஈரோடு: செங்கல்பட்டு அருகே நேற்று நடைபெற்ற ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கால் இடறி கீழே விழுந்தார். இந்த நிலையில் இது குறித்து பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தி ஆவதில்லை. ஆனால் நான் விழுந்தால் அது பெரிய செய்தி ஆகிறது" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.
புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- அனைவருமே யோகா கற்றுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நான் விழுந்தால் பெரிய செய்தியாகிறது
நான் வரும் போது ஒரு பெரியவர் என்னிடம் 2 செல்போன்கள் எப்படி வைத்து இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அப்போது, 2 மாநிலத்தையே சமாளிக்கிறேன். 2 செல்போனை சமாளிக்க முடியாதா என்று நான் கூறினேன். இதேபோலத்தான் அனைவரும் பணியாற்ற வேண்டும். நான் 48 மணி நேரம் வேண்டும் என்றாலும் தொடர்ச்சியாக பணி செய்ய தயராக உள்ளேன். நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தியாவதில்லை. ஆனால் நான் விழுந்தால் பெரிய செய்தியாகிறது" என்றார்.

கால் தடுமாறி கீழே விழுந்த
முன்னதாக நேற்று செங்கல்பட்டில் இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ரெட் கார்பெட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார், உடனே அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை குறிப்பிட்டுத்தான் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- ஆளுநர்கள், குடியரசுத்தலைவர், உள்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும் திறமனையாவர்களையும் அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறது.

மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்
மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் எம்.பிக்கள் ஆகியிருப்போம். மத்திய அமைச்சர்கள் ஆகியிருப்போம். தோற்கடிக்கப்பட்டதால் எங்களின் திறமையை வீணடிக்க வேண்டாம் என்று விரும்பிய மத்திய அரசு எங்களை ஆளுநர்களாக ஆக்கியுள்ளது. எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதை நான் சொன்னால் கூட இதுபற்றியும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வரலாம்" என்றார்
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications