Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயிரம் மைல் கடந்து வந்த கள்ளக்காதல்.. கணவனை பிரிந்து வந்த பெண்.. கழுத்தை நெறித்து கொன்ற இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்து உள்ளது கந்தாம்பாளைம். இங்கு தனியார் விசைத்தறி கூடம் ஒன்றில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்கீத்குமார் (வயது 38) என்பவர் வேலை செய்து வருகிறார்.

North state laborer who killed his girlfriend near Perundurai in Erode district

இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா காதுகான் (36) என்பவரும் அதே விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வந்தார். ரேஷ்மா காதுகானுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு ரேஷ்மா காதுகான் பிரிந்து விட்டார்.

ஒரே விசைத்தறி கூடத்தில் ரேஷ்மா காதுகானும், அன்கீத் குமாரும் வேலை பார்த்து வந்துள்ளதால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருக்கிறது. இதனால் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் அன்கீத் குமாருக்கும், ரேஷ்மா காதுகானுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த 13-ந் தேதி ரேஷ்மா காதுகான் கந்தாம்பாளையம் விசைத்தறி கூடத்துக்கு அருகே உள்ள தனியார் பள்ளிக்கூட சுற்றுச்சுவரின் அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

பெண் விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த ரேஷ்மா காதுகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

North state laborer who killed his girlfriend near Perundurai in Erode district

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவில் ரேஷ்மா காதுகான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் அவரை கொலை செய்தது அவருடைய கள்ளக்காதலன் அன்கீத் குமார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த அன்கீத் குமார் விசைத்தறி கூடத்தில் இருந்து தலைமறைவானார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்கீத் குமார் பெருந்துறைக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஒரு மாதமாக தலை மறைவாக இருந்த அன்கீத் குமாரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+