தர்மபுரி மக்கள் மனதில் ஈரம் இல்லையா.. சௌமியா அன்புமணி தோல்வி.. பாமகவினர் கண்ணீர் போஸ்டர்
ஈரோடு: தர்மபுரி லோக்சபா தொகுதியில் பாமக தலைவர் அன்புமண ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தோல்வி அடைந்ததை ஏற்க முடியாமல் பாமகவினர் பலர் கவலையுடன் கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பாமகவினர் "மீண்டு வா என் தாயே.." என்று போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
திமுக தோற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக அத்தனை கருத்துக்கணிப்புகளும் சொன்ன ஒரு தொகுதி என்றால் தர்மபுரி தான். அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டது தான். சௌமியா அன்புமணி மீது எந்த விமர்சனங்களை முன்வைக்க முடியாதது ஒருபுறம் எனில், அங்கு பாமகவிற்கு இருந்த அசுர பலம் போன்ற காரணங்களால் கண்டிப்பாக தர்மபுரியில் திமுக வெற்றி பெறுவது கடினம் என்றே கணிப்புகள் கூறின,

கணிப்புகள் சொன்னது போலவே தர்மபுரி லோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை வகித்து வந்தார் சௌமியா அன்புமணி, 11-வது சுற்றுவரை முன்னிலை வகித்த அவர் கடும் இழுபறிக்கு இடையே வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி, அ.தி.மு.க. வேட்பாளர் அசோகன், பாஜக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 24 பேரில் திமுக, அதிமுக, பாமக இடையே தான் கடும் போட்டி நிலவியது.
சௌமியா அன்புமணி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக அவருடைய 3 மகள்களும் தொகுதியில் தங்கி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்கள். சௌமியா அன்புமணி மகள்களின் பிரச்சாரத்திற்கு தர்மபுரி மாவட்டம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்தது, பா.ஜனதா கூட்டணியில் தமிழ்நாட்டில் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியாகவே தர்மபுரி பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக மாறியது.. வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடந்த நிலையில், முதல் சுற்றிலேயே 25 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் மணியை விட 12 ஆயிரத்து 128 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அப்படியே 11 சுற்றுகளில் சவுமியா அன்புமணியே முன்னிலை வகித்தார். 12-வது சுற்றில் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் சுமார் 10 ஆயிரம் வாக்குகளோடு தி.மு.க. வேட்பாளர் மணி முன்னிலைக்கு வந்தார். ஆனால் கடைசி சுற்று முடிவில் சௌமியா அன்புமணி சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் மணி 4,32,667 வாக்குகள் பெற்றார். சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்றார்.
சௌமியா அன்புமணி , தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகிளில் திமுக வேட்பாளர் மணியைவிட அதிக வாக்குகள் வாங்கியிருந்தார். அதேபோல் பாலக்காடு, மேட்டூர் தொகுதிகளில் மணியைவிட மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தது. ஆனால் அரூர் தனி தொகுதியால் அவரது வெற்றி அப்படியே பறிபோனது. அரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மணியைவிட சௌமியா அன்புமணி, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் குறைவாக வாங்கினார். இதனால் முன்னிலையில் இருந்த சௌமியா அன்புமணி, கடைசி சுற்றில் சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சௌமியா அன்புமணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் பாமகவினர் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கவலைகளை கருத்துக்களாக வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோட்டு மாநகரின் புறநகர் பகுதியான பள்ளிப்பாளையத்தில் கண்ணீர் மல்க போஸ்டர் ஓட்டியுள்ளனர் பாமகவினர். "மீண்டு வா என் தாயே.." என்ற பெயரில் ஓட்டியள்ள போஸ்டரில், "ஆறுதல் கூற வார்த்தைகள் தேடினேன்.. வார்த்தைகள் வரவில்லை..
கண்ணில் கண்ணீர் தான் வருகிறது... எதை கொண்டு ஆறுதல் சொல்வேன் தாயே...!!!
கல்லுக்கும் ஈரம் உண்டு, தர்மபுரி மக்கள் மனதில் ஈரம் இல்லை என்று சொல்லவா.. !
தோல்வி நிரந்தரம் கிடையாது.. அதில் இருந்து மீண்டு வா என் தாயே" என்று போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.. இந்த போஸ்டரில் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, ராமதாஸ் ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ளது.
-
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications