ஈரோடு கிழக்கு ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் 9 மணியை கடந்தும் நடந்த வாக்குப்பதிவு.. காரணம் இதுதான்
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திங்கள் கிழமை இரவு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. ராஜாஜிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 200 மீட்டர் தூரத்துக்கும் மேல் வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், இரவு 9 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருகை தந்தனர். வாக்குச்சாவடி சீட்டு பெறாதவர்களுக்கும் அங்கேயே சீட்டுகள் வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே ஓட்டுப்போட பொதுமக்கள் ஆர்வமாக வந்தனர்.

முதியோர்கள், நடக்க முடியாதவர்கள் கூட சக்கர நாற்காலிகளில் அழைத்து வரப்பட்டனர். பலரை கைத்தாங்கலாகவும் அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். இளம் வாக்காளர்கள், நடுத்தர வயதினர் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக வந்து வாக்களித்தை காண முடிந்தது. போட்டிக் களத்தில் 77 வேட்பாளர்கள் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஓட்டுப்பதிவு தாமதமானது. நேரம் செல்லச்செல்ல வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது பகல் 11 மணிக்கு 27.89 சதவீதமாக உயர்ந்தது. நேரம் செல்ல செல்ல வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை காண முடிந்தது.

குறிப்பாக ராஜாஜிபுரத்த்தில் உள்ள வாக்குச்சாவடியில் 200 மீட்டர் தூரத்துக்கும் மேல் வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், இரவு 9 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது. நூற்றுக்கணக்கான பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க நின்றதை காண முடிந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண் வாக்காளர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நிலைமையை சரி செய்தனர். தேர்தல் பார்வையாளரும் இந்த வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். 6 மணிக்கு மேல் வந்த 368 வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் 9.15 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications