Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிராமா பண்ண கூடாது! ராஜ்யசபாவில் டென்ஷனான தன்கர்! திரிணாமுல் எம்பி ஓ பிரைனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பதைப் பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அங்கு ஆட்சியில் இருந்தாலும், டெல்லி ஒரு யூனிசன் பிரதேசம் என்பதால் போலீஸ் உள்ளிட்ட முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

 Rajya Sabha Speaker VP Dhankhar suspended TMCs Derek O’ Brien from the Upper House

இதற்கிடையே அங்கே அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் துணை நிலை ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் குறித்து மத்திய அரசு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது..

மசோதா: லோக்சபாவில் ஏற்கனவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான விவாதம் நேற்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அதன் பிறகு இரவில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 131 வாக்குகள் பதிவான நிலையில், எதிராக 102 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதன் மூலம் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பல்வேறு எம்பிகள் பேசினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையனும் இது குறித்துப் பேசினார். இந்த சட்டத்தின் மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தை சிதைப்பதாகத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் இப்போது நிறைவேற்றப்படும் மசோதாக்களில் மூன்றில் ஒரு பங்கு கூட்டாட்சிக்கு எதிராகவே இருப்பதாகவும் அவர் சாடினார். மேலும், அவர் மணிப்பூர் விவகாரம் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

டென்ஷன்: அப்போது குறுக்கிட்ட தன்கர் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா குறித்து மட்டுமே பேசுமாறு தெரிவித்தார். இருப்பினும் ஓ பிரைன் தனது பேச்சைத் தொடர்ந்தார். அப்போது டெரிக் ஓ பிரைனை பார்த்து ஜக்தீப் தன்கர், "இதுவே உங்களுக்கு பேஷனாகிவிட்டது.. தொடர்ந்து இப்படிச் செய்கிறீர்கள். வெளியுலகில் விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்..

இங்கு என்ன டிராமா செய்யவா வந்தீர்கள்.. இதற்காகவே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.. முதலில் உட்காருங்கள்.. இப்படியெல்லாம் செய்து பலன் தராது" என்றார். டெரிக் ஓ பிரைனை அப்போது அவையில் இருந்து வெளியேறவும் அவர் உத்தரவிட்டார். மேலும், அவரது பேச்சின் ஒரு சில பகுதிகளை நீக்கவும் தன்கர் உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட்: இதற்கிடையே ராஜ்யசபாவில் திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்து தன்கர் உத்தரவிட்டார். எஞ்சியிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து தன்கர் உத்தரவிட்டார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் கூறிய சில கருத்துகளுக்காகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக அந்த விவாதத்தில் பேசிய பிரைன், எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல் செய்வதாகக் குறிப்பிடும் பாஜகவுக்கு ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே எம்பியாக முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வரும் துணிச்சல் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார். இப்போது தான் தன்கர் அவரது பேச்சு முடித்துக் கொள்ள வலியுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+