ஆமா முதல்வருக்கு லவ் டுடே படம் பார்க்க நேரமிருக்கு.. வெள்ளத்தை பார்க்க நேரமில்லையா? அண்ணாமலை
ஈரோடு: முதல்வர் ஸ்டாலினுக்கு லவ் டுடே படம் பார்க்க நேரமிருக்கிறது. ஆனால் வெள்ளத்தை பார்க்க நேரமில்லையா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவர் பேசுகையில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது காலத்தின் கட்டாயம், ஏன்னு கேட்டீங்கன்னா, முதல்வர் காலையில் எழுந்தவுடன் எந்த பொருளின் விலையை ஏற்றலாம் என யோசிக்கிறார்.

மத்திய அரசு
பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்தும் அதை மாநில அரசு குறைக்கவில்லை. 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தை போல தமிழகத்தில் அனைத்து படங்களையும் உதயநிதி ஸ்டாலினே வாங்குகிறார். மகன் வெளியிட்ட லவ் டுடே படத்தை முதல்வர் ஸ்டாலின் 3 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துள்ளார்.

சென்னை வெள்ளம்
ஆனால் சென்னை வெள்ளத்தை கவனிக்க அவருக்கு நேரமில்லை. அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவீத விவசாயிகளுக்கு சென்றடைகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் இப்படி செய்யவில்லை. அதனால் ஆவின் நிறுவனம் நஷ்டமடைகிறது. பால் உற்பத்தியில் வரும் லாபம் விவசாயிகளை சென்றடைய வேண்டும். சென்னையில் சிறிதளவு பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியது.

டிசம்பர் மாதம் மழை
இன்னும் டிசம்பர், ஜனவரி மாதங்களில்தான் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான குற்றவாளியை முதல்வர் கொண்டாடினார். கோவை கார் வெடிப்பை பற்றி நாங்கள் பேசவில்லை என்றால் தீபாவளி பண்டிகைக்கு துணி மணி வாங்க வந்த மக்கள் நிறைய பேர் இறந்திருப்பார்கள்.

2024 ஆம் ஆண்டு 25 எம்பிக்கள்
நாங்கள் குரல் கொடுத்ததால்தான் இந்த வழக்கிலிருந்து சில விஷயங்கள் வெளியே வந்தது. குற்றவாளிகள் அடுத்தடுத்து கைதாகினர். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருமளவு வெல்லும். தமிழகத்தில் இருந்து 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தமிழகத்திலிருந்து செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

39 எம்பி தொகுதிகள்
அதாவது தமிழகத்தில் இருப்பது 39 நாடாளுமன்றத் தொகுதிகள். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அது போல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதிமுக தலைமையில் என்றால் நிச்சயம் அதிமுக 25 இடங்களுக்கு குறையாமல் போட்டியிடும். மீதமுள்ள 14 இடங்களைத்தான் கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பர். ஆனால் அண்ணாமலையோ இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலிருந்து 25 பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என்கிறார். இது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களில் யார் தனித்து போட்டியிட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications