கணவருக்காக மது வாங்க சென்ற பெண்... வியப்பை ஏற்படுத்திய அந்தியூர் டாஸ்மாக்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் டாஸ்மாக்கில் கணவருக்காக வரிசையில் நின்று பெண் ஒருவர் மது வாங்கிச் சென்றது அப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கட்டி ஏறியது. வயதுவாரியாக நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மது வாங்க வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அந்தாணி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக்கிற்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதார்த்தமாக டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், டாஸ்மாக் வரிசையில் பெண் நிற்பதை கண்டு திகைத்து போனார். அவர் அருகே சென்று, எதற்காக நீங்கள் இங்கு நிற்கிறீர்கள் என ஆட்சியர் வினவ, அதற்கு பதிலளித்த அந்த பெண் எனது கணவருக்காக மது வாங்கி செல்ல வந்திருக்கிறேன். அவருக்கு நடக்க முடியாததால் வீட்டில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மது வாங்க பணம் ஏது, வேலைக்கு தான் செல்லவில்லையே என ஆட்சியர் கதிரவன் மீண்டும் கேட்டிருக்கிறார். தமிழக அரசு ரூ.1000 நிவாரணத் தொகை தந்ததாகவும் அந்த பணத்தில் மது வாங்க வந்ததாகவும் அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இந்த பதிலை கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடன் சென்றிருந்த அதிகாரிகள் அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துள்ளனர்.
மதுவில்லாமல் தனது கணவனால் இருக்க முடியாது என்றும், அவரை வெளியேவிட்டால் மது அருந்திவிட்டு சாலைகளில் விழுந்துகிடப்பார் என்பதால் அதை தவிர்ப்பதற்காக வேறு வழியின்றி டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளதாக அந்த பெண் கூறினார். இதனிடையே மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது ஆய்வை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications