கணவருக்காக மது வாங்க சென்ற பெண்... வியப்பை ஏற்படுத்திய அந்தியூர் டாஸ்மாக்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் டாஸ்மாக்கில் கணவருக்காக வரிசையில் நின்று பெண் ஒருவர் மது வாங்கிச் சென்றது அப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கட்டி ஏறியது. வயதுவாரியாக நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மது வாங்க வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அந்தாணி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக்கிற்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதார்த்தமாக டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், டாஸ்மாக் வரிசையில் பெண் நிற்பதை கண்டு திகைத்து போனார். அவர் அருகே சென்று, எதற்காக நீங்கள் இங்கு நிற்கிறீர்கள் என ஆட்சியர் வினவ, அதற்கு பதிலளித்த அந்த பெண் எனது கணவருக்காக மது வாங்கி செல்ல வந்திருக்கிறேன். அவருக்கு நடக்க முடியாததால் வீட்டில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மது வாங்க பணம் ஏது, வேலைக்கு தான் செல்லவில்லையே என ஆட்சியர் கதிரவன் மீண்டும் கேட்டிருக்கிறார். தமிழக அரசு ரூ.1000 நிவாரணத் தொகை தந்ததாகவும் அந்த பணத்தில் மது வாங்க வந்ததாகவும் அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இந்த பதிலை கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடன் சென்றிருந்த அதிகாரிகள் அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துள்ளனர்.
மதுவில்லாமல் தனது கணவனால் இருக்க முடியாது என்றும், அவரை வெளியேவிட்டால் மது அருந்திவிட்டு சாலைகளில் விழுந்துகிடப்பார் என்பதால் அதை தவிர்ப்பதற்காக வேறு வழியின்றி டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளதாக அந்த பெண் கூறினார். இதனிடையே மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது ஆய்வை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications