ஈரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்த டிடிவி தினகரன்
ஈரோடு: ஈரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை டிடிவி தினகரன் மீட்டு மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தமிழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் குமாரப்பாளையத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.

ஈரோட்டின் திண்டல்மேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தினகரன் தனது வாகனத்தை நிறுத்த சொல்லிவிட்டு உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்தார்.
விபத்தில் சிக்கியவர்களை வாகனத்தில் ஏற்றிய போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்துவிட்டதால் அவர்களை இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications