பங்காளி துரைமுருகன் கண்ணில் விரல் விட்டு ஆட்டியவன் நான்! மாப்ள அக்.9ஆம் தேதி இருக்கு! -வேல்முருகன்
ஈரோடு: சட்டசபையில் என் பங்காளி துரைமுருகன் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவன் நான், நீங்களெல்லாம் எனக்கு எம்மாத்திரம் என்று ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது அளவு கடந்த கோபத்தை கொட்டித்தீர்த்துள்ளார் வேல்முருகன்.
சட்டசபை கூடும் அக்டோபர் 9ஆம் தேதி அன்று ''உங்களுக்கு கச்சேரி இருக்கு மாப்ள'' என்று ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளையும், ஈரோடு காவல்துறையினரையும் அவர் சாடியிருக்கிறார்.

ஈரோட்டில் என்ன நடந்தது வேல்முருகனின் கோபத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி பார்க்கலாம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் முயலும் கர்நாடக அரசை கண்டித்து ஈரோட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேல்முருகன் பங்கேற்று உரையாற்றியதால் அவரது கட்சியினர் ஆர்வத்துடன் நகரின் பல இடங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடிகளை நட்டுள்ளனர். அதேபோல் விளம்பர பேனர்களையும் ஆங்காங்கு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் காவல்துறை தரப்பிலும், மாநகராட்சி அதிகாரிகள் தரப்பிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் கடும் கெடுபிடி காட்டப்பட்டிருக்கிறது.
நடப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த விவரத்தை ஈரோடு வந்தடைந்த வேள்முருகனிடம் கட்சி நிர்வாகிகள் சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து மேடையில் பேச்சை தொடங்கும் போதே ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளை வெளுத்து வாங்க ஆரம்பித்தார் வேல்முருகன்.
''என்னை யாருன்னு நினைச்சுடீங்க, தொலைச்சுபுடுவேன் தொலைச்சு, சட்டசபையில் என் பங்காளி துரைமுருகன் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவன் நான், நீங்களெல்லாம் எம்மாத்திரம், உங்களுக்கு இருக்கு மாப்ள, அக்டோபர் 9ஆம் தேதி சட்டசபை கூடட்டும் வச்சுக்கறேன்'' என மொத்த கோபத்தை கொட்டும் மழையில் கொட்டித் தீர்த்தார்.
திமுகவை சேர்ந்த ஈரோடு மேயர் நாகரத்தினம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் மொத்த பயோடேட்டாவையும் கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிக்கொண்ட வேல்முருகன், சட்டசபையில் இது பற்றி பேசி வெளுத்து வாங்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications