கரூரை கண்டும் திருந்தலையே.. கைக்குழந்தையுடன் விஜயை பார்க்க வந்த பெற்றோர்! திருப்பி அனுப்பிய போலீஸ்
ஈரோடு: கரூர் சம்பவத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய், பொதுவெளியில் ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பை நடத்துகிறார். இந்த நிலையில் காவல்துறை அறிவுறுத்தல்களையும் மீறி தவெக தொண்டர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் எச்சரிக்கையை மீறி குழந்தைகளுடன் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கரூரில் நடைபெற்ற சம்பவத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து, நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், இன்று ஈரோட்டில் பொதுமக்களை நேரில் சந்திக்கிறார்.
விஜயமங்கலம் அருகே சரளையில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு, அரசியல் வட்டாரங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்துக்காக சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க எந்தவிதமான பாஸ், கியூஆர் கோடு உள்ளிட்ட அனுமதிச் சீட்டுகள் தேவையில்லை என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால், எதிர்பார்ப்பை விட அதிக அளவில் தொண்டர்களும் பொதுமக்களும் திரள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவெக தொண்டர்கள் ஈரோடு நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கார்கள் மற்றும் பெரிய வாகனங்களுக்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவிலும், இருசக்கர வாகனங்களுக்கு 20 ஏக்கர் பரப்பளவிலும் தனித்தனி வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக வாகன நிறுத்தத்திற்காக மட்டும் 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, காவல்துறை முன்கூட்டியே வெளியிட்டிருந்த அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக, கூட்டத்துக்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த எச்சரிக்கையை மீறி குழந்தைகளுடன் வந்த சிலரை காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதலே கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் தவெக கொடிகள், பேனர்கள், கோஷங்கள் என திருவிழா போல காணப்படுகிறது. கூட்டம் தொடங்க இன்னும் நேரம் இருப்பதால், மேலும் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திப்பதால், அவர் என்ன பேசப்போகிறார், அரசியல் ரீதியாக என்ன செய்தி அளிக்கப்போகிறார் என்பதில் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் கவனமாக எதிர்பார்த்து வருகின்றன.
விஜயின் மக்கள் சந்திப்பு தொடர்பாக ஏற்கனவே காவல்துறை தரப்பிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைப்பிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக விஜயின் வாகனத்தை இருசக்கர வாகனங்களில் பின் தொடரக்கூடாது, பள்ளி குழந்தைகளை அழைத்து வரக்கூடாது, கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் வீட்டிலிருந்தே நேரலையில் விஜயின் பேச்சைக் கேட்க வேண்டும், மரங்கள், மின்கம்பங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் அருகே செல்லக்கூடாது என பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தும் அவற்றை தவெக தொண்டர்கள் மீறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்!












Click it and Unblock the Notifications