ஈரோட்டில் கவிழ்ந்த கார்.. இளம் பெண்ணுக்கு கடைசி நிமிடத்தில்.. கெட்டதிலும் நடந்த நல்லது
ஈரோடு: ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வனஜா என்பவருக்கு ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை கிடைத்து உள்ளது. வேலையில் சேர்வதற்காக வீட்டில் இருந்து சொகுசு காரில் நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளார். வேலைக்கு முதல் முதலாக சென்ற போது, நாய் குறுக்கே வந்ததால் கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தெருநாய்கள் சாலையில் திடீரென குறுக்கே வந்து விடுவதால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சாலைகளில் வாகனம் ஓட்டும் யாரை கேட்டாலும் தெருநாய்களின் தொல்லை குறித்து கண்டிப்பாக சொல்வார்கள். அந்த அளவிற்கு தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். ஈரோட்டில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்

ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவருடைய மகள் வனஜாவுக்கு 27 வயது ஆகிறது. ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை கிடைத்திருக்கிறது. முதல் நாள் வேலையில் சேர்வதற்காக வீட்டில் இருந்து சொகுசு காரில் நேற்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். காரை உதவி பேராசிரியை வனஜாவே ஓட்டிச்சென்றார்.
ஈரோட்டில் இருந்து புறப்பட்டு புறநகர் பகுதியான பெருந்துறை ரோட்டில் பவளத்தாம்பாளையம் பகுதியில் வனஜாவின் கார் சென்றது. அப்போது நாய் ஒன்று காரின் குறுக்கே ஓடியது. இதனால் அவர் நாய் மீது கார் மோதாமல் இருக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கர சத்தத்துடன் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த உடன் காருக்குள் இருந்த 'காற்றுப்பை' (ஏர்பேக்) உடனே செயல்பட்டு திறந்தது.. இதனால் வனஜா அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வனஜாவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் ஈரோடு- பெருந்துறை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதவி பேராசிரியை வேலையில் சேர சென்றபோது விபத்தில் இளம்பெண் சிக்கிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் பரவி வருகிறது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏர்பேக் வேலை செய்யாமல் போயிருந்தால், அசம்பாவிதம் நடந்திருக்கும். நல்ல வேளையாக கார் கட்டுப்பாட்ட இழந்த போது, ஏர்பேக் வேலை செய்ததால் பேராசிரியை வனஜா உயிர் தப்பி உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications