ஈரோட்டில் கவிழ்ந்த கார்.. இளம் பெண்ணுக்கு கடைசி நிமிடத்தில்.. கெட்டதிலும் நடந்த நல்லது
ஈரோடு: ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வனஜா என்பவருக்கு ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை கிடைத்து உள்ளது. வேலையில் சேர்வதற்காக வீட்டில் இருந்து சொகுசு காரில் நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளார். வேலைக்கு முதல் முதலாக சென்ற போது, நாய் குறுக்கே வந்ததால் கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தெருநாய்கள் சாலையில் திடீரென குறுக்கே வந்து விடுவதால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சாலைகளில் வாகனம் ஓட்டும் யாரை கேட்டாலும் தெருநாய்களின் தொல்லை குறித்து கண்டிப்பாக சொல்வார்கள். அந்த அளவிற்கு தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். ஈரோட்டில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்

ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவருடைய மகள் வனஜாவுக்கு 27 வயது ஆகிறது. ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை கிடைத்திருக்கிறது. முதல் நாள் வேலையில் சேர்வதற்காக வீட்டில் இருந்து சொகுசு காரில் நேற்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். காரை உதவி பேராசிரியை வனஜாவே ஓட்டிச்சென்றார்.
ஈரோட்டில் இருந்து புறப்பட்டு புறநகர் பகுதியான பெருந்துறை ரோட்டில் பவளத்தாம்பாளையம் பகுதியில் வனஜாவின் கார் சென்றது. அப்போது நாய் ஒன்று காரின் குறுக்கே ஓடியது. இதனால் அவர் நாய் மீது கார் மோதாமல் இருக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கர சத்தத்துடன் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த உடன் காருக்குள் இருந்த 'காற்றுப்பை' (ஏர்பேக்) உடனே செயல்பட்டு திறந்தது.. இதனால் வனஜா அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வனஜாவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் ஈரோடு- பெருந்துறை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதவி பேராசிரியை வேலையில் சேர சென்றபோது விபத்தில் இளம்பெண் சிக்கிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் பரவி வருகிறது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏர்பேக் வேலை செய்யாமல் போயிருந்தால், அசம்பாவிதம் நடந்திருக்கும். நல்ல வேளையாக கார் கட்டுப்பாட்ட இழந்த போது, ஏர்பேக் வேலை செய்ததால் பேராசிரியை வனஜா உயிர் தப்பி உள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications