எதிர்நீச்சல்: குணசேகரனால் தான் கயல்விழி இறந்தார்.. உண்மையை சொன்ன ஈஸ்வரி.. ஜீவானந்தத்தின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

இதில் குணசேகரன் மற்றும் கதிரால்தான் ஜீவானந்தத்தின் மனைவி இறந்தார் என்ற உண்மையை ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் சொல்கிறார்.

Ethirneechal Serial 2023 October 16th promo and fans reaction

அதே நேரத்தில் சக்தி மற்றும் ஜனனி இடையே பிரச்சனை வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்த திருப்பம் வந்திருக்கிறது. ஏற்கனவே அடுத்து ஆதி குணசேகரன் யார் என்று கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பும் அது பற்றிய பில்டப்புகளும் அதிகமாக இருந்த நிலையில் கடைசியாக வேலராமமூர்த்தி ஆதி குணசேகரன் ஆக அறிமுகம் ஆகி இருந்தார். இதனால் அந்த எபிசோடு டிஆர்பி யில் முதல் இடத்தை பெற்றிருந்தது.

அதைத் தொடர்ந்து குணசேகரன் திடீரென்று ஜெயிலுக்கு போவது போன்று கதையை வைத்திருக்கின்றனர். இன்னும் ஏழு நாட்களுக்கு குணசேகரன் ஜெயிலில் இருப்பார் என்றும் அதற்குள் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவின் கதையை முடிக்க வேண்டும் என்றும் குணசேகரன் மூலமாக வக்கீல் கதிர் மற்றும் ஞானத்திடம் கூறியிருந்தனர். இதனால் கதிர் அடுத்தடுத்து தன்னுடைய பிளான்களை போட்டுக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial 2023 October 16th promo and fans reaction

இந்த நிலையில் நேற்றைய எபிசோடு வக்கீல் மூலமாக குணசேகரன் கதிரை கிள்ளிவளவனை போய் பார்க்கச் சொல்லி இருந்தார். இதனை கேள்விப்பட்ட ஞானம் எதற்காக கிள்ளிவளவனை இவன் சந்திக்க வேண்டும் என்று கேள்வி கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவை கோவில் திருவிழா அன்று அப்பத்தா நடத்தும் பங்க்ஷனில் வைத்து கொலை செய்வதற்காக கதிர் ப்ளான் போட்டுக் கொண்டிருக்க இதை எல்லாம் மாடியில் நின்று ஈஸ்வரி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் அவசரமாக வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று வீட்டை விட்டு ஈஸ்வரி கிளம்பி ஜீவானந்தம் வீட்டிற்கு வந்திருந்தார். அதே நேரத்தில் கம்பெனி தொடங்குவதிலும் சிறு பிரச்சனை இருப்பதால் நாங்களும் வெளியே போயிட்டு வருகிறோம் என்று சக்தியும் ஜனனியும் வெளியே கிளம்பி இருந்தனர். இப்படியாக நேற்றைய எபிசோடு இருந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் சக்தியும் ஜனனியும் ரோட்டில் சென்று கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 October 16th promo and fans reaction

அப்போது சக்தி ஜனனியிடம் கம்பெனியை தொடங்குவதற்கு முன்பே இத்தனை பிரச்சனை வருகிறது. அப்படி என்றால் இந்த கம்பெனி முக்கியமா? என்று கேட்க, அதற்கு கோபமான ஜனனி அதற்காக அப்படியே நம்ம விட்டுட முடியுமா? என்று கேட்க இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி நீங்க கண்டிப்பா அந்த பங்க்ஷனில் கலந்து கொள்ள வேண்டுமா? என்று கேட்க,

அதற்கு ஜீவானந்தம் நான் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு தயங்கி தயங்கி யோசித்து கொண்டு இருக்கும் ஈஸ்வரி பிறகு முகத்தை திருப்பி நின்று கொண்டு ஜீவானந்தத்திடம் உங்க மனைவி கயல்விழியை கொலை செய்தது என்னுடைய புருஷன் குணசேகரனும் கதிரும் தான் என்று சொல்ல ஜீவானந்தம் அதிர்ச்சியாகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசொட்டில் பெரும் பஞ்சாயத்தும் திருப்பங்களும் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+