11 மாத பிஞ்சு குழந்தை.. இதயத்தில் பிரச்சினை.. மனமிருந்தால் உதவலாம் பிளீஸ்!
சென்னை: 11 மாத குழந்தையான அஜய்க்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி தேவைப்படுகிறது. நீங்கள் மனது வைத்தால், அந்த சிறுவனை காப்பாற்ற உதவலாம்.
வட சென்னையின், சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதாகும் அசோக் குமார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியின், முதல் குழந்தை பிறந்து 4 வருடங்கள் கழித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி, இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஜய் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

அஜய் பிறந்ததுமே, உடல்நலக்குறைவால் ஆபத்தான கட்டத்திற்கு சென்றார். இதையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இங்குபேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான், அஜய்க்கு தொண்டை மற்றும் இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதய சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் அஜய். அசோக் குமார், குடோனுக்கு லோடு ஏற்றும் தொழிலாளி. அவரிடம், மருத்துவ சிகிச்சைக்கு செலவிட பணம் இல்லை.

ஆனால் எவ்வளவு விரைவாக இந்த அறுவை சிகிச்சை செய்கிறார்களோ, அவ்வளவு நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். Tetralogy of Fallot, Sub Arterial VSD (Oriental TOF Type), Severe Cyanosis with spells என்று அழைக்கப்படும் இந்த இதய நோய் அறுவை சிகிச்சைக்கு, மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு, பரிசோதனைகள் செய்ய என மொத்தம் சுமார் ரூ.3,00000 செலவிட தேவையுள்ளது.
எனவே உங்களால் முடிந்த உதவிகளை செய்து குழந்தையை காப்பாற்றுங்களேன்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications