நீங்கள் மனது வைத்தால் 5 மாத சிறுமியின் உயிர் காக்க உதவ முடியும்
நாகர்கோவில்: இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை உடனே செய்திடுங்கள்.
நாகர்கோவிலை சேர்ந்த தம்பதி ஸ்ரீதரன், சாந்தினி. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நாளில் இருந்தே மொத்த வீடு சந்தோஷத்தில் இருந்தது. தினக்கூலி வேலை பார்க்கும் தந்தை ஸ்ரீதரன் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தம்பதிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீரென குழந்தைக்கு மூச்சு விடுவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள் சிஎச்டி எனப்படும் Coronary heart disease (CHD) என்னும் இதய கோளாறு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இது பெரிய இதய பாதிப்பு. எங்களால் இங்கே சிகிச்சை மேற்கொள்ள முடியாது.
இதனால் அருகில் இருக்கும் திருவனந்தபுரத்திற்கு குழந்தையை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையை திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அவர்களிடம் அதற்கான போதிய உபகரணங்கள் இல்லை. இதனால் வேறு ஒரு மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து திருவனந்தபுரத்தில் வேறு ஒரு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர்.
அங்கு குழந்தைக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு 6-7 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் என்று கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை.
குழந்தையின் தந்தை ஸ்ரீதரன் கூலித் தொழிலாளி. தந்தை சாந்தினி வீட்டில் வேலை பார்ப்பவர். இதனால் அவர்களிடம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு போதிய பணம் இல்லை.
நீங்கள் நிதி கொடுத்து உதவி செய்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள். இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவிகளை உடனே செய்திடுங்கள்.
RECOMMENDED STORIES