ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸில் தகதகவென எரியும் தீ! இரவு பணியாளர்களின் நிலை என்ன? முக்கிய அப்டேட்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாகமங்கலம் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் அதிகளவுக்கு கரும்புகை ஏற்பட்டுள்ளது. அந்த ரசாயனம் சேமிக்கும் பிளாண்டில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள தொழிலாளர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
ஓசூரில் நாகமங்கலத்தில் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இது 500 ஏக்கர் கொண்ட நிறுவனமாகும். இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

ஒரு ஷிப்டிற்கு 1500 பேர் முதல் 2000 பேர் வரை பணியாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை ரசாயனங்களை சேமித்து வைக்கும் ஒரு யூனிட்டில் இருந்த டேங்க் ஒன்று வெடித்தது. இதனால் அங்கிருந்த ரசாயனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தகவலறிந்த அந்த நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் தீயை அணைக்க போராடி வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேனிகனிக்கோட்டை, பாகூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கரும்புகை அதிகளவில் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதிக்கு செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் இரவு பணிக்கு சென்றவர்கள், வெளியே வர முடியாததால் பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் கெமிக்கல் பிளாண்டில் பணியாற்றியவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இரு தொழிலாளர்களுக்கு மட்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீவிபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த ஷிப்ட்டிற்கு வந்தவர்கள் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிவதால் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து பல லட்சங்கள் சேதமடைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பொருட் சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications