ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸில் தகதகவென எரியும் தீ! இரவு பணியாளர்களின் நிலை என்ன? முக்கிய அப்டேட்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாகமங்கலம் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் அதிகளவுக்கு கரும்புகை ஏற்பட்டுள்ளது. அந்த ரசாயனம் சேமிக்கும் பிளாண்டில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள தொழிலாளர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
ஓசூரில் நாகமங்கலத்தில் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இது 500 ஏக்கர் கொண்ட நிறுவனமாகும். இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

ஒரு ஷிப்டிற்கு 1500 பேர் முதல் 2000 பேர் வரை பணியாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை ரசாயனங்களை சேமித்து வைக்கும் ஒரு யூனிட்டில் இருந்த டேங்க் ஒன்று வெடித்தது. இதனால் அங்கிருந்த ரசாயனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தகவலறிந்த அந்த நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் தீயை அணைக்க போராடி வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேனிகனிக்கோட்டை, பாகூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கரும்புகை அதிகளவில் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதிக்கு செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் இரவு பணிக்கு சென்றவர்கள், வெளியே வர முடியாததால் பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் கெமிக்கல் பிளாண்டில் பணியாற்றியவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இரு தொழிலாளர்களுக்கு மட்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீவிபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த ஷிப்ட்டிற்கு வந்தவர்கள் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிவதால் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து பல லட்சங்கள் சேதமடைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பொருட் சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications