ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸில் தகதகவென எரியும் தீ! இரவு பணியாளர்களின் நிலை என்ன? முக்கிய அப்டேட்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாகமங்கலம் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் அதிகளவுக்கு கரும்புகை ஏற்பட்டுள்ளது. அந்த ரசாயனம் சேமிக்கும் பிளாண்டில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள தொழிலாளர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
ஓசூரில் நாகமங்கலத்தில் உள்ள டாடா மின்னணு நிறுவனத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இது 500 ஏக்கர் கொண்ட நிறுவனமாகும். இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

ஒரு ஷிப்டிற்கு 1500 பேர் முதல் 2000 பேர் வரை பணியாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை ரசாயனங்களை சேமித்து வைக்கும் ஒரு யூனிட்டில் இருந்த டேங்க் ஒன்று வெடித்தது. இதனால் அங்கிருந்த ரசாயனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தகவலறிந்த அந்த நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் தீயை அணைக்க போராடி வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேனிகனிக்கோட்டை, பாகூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கரும்புகை அதிகளவில் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதிக்கு செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் இரவு பணிக்கு சென்றவர்கள், வெளியே வர முடியாததால் பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் கெமிக்கல் பிளாண்டில் பணியாற்றியவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இரு தொழிலாளர்களுக்கு மட்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீவிபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த ஷிப்ட்டிற்கு வந்தவர்கள் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிவதால் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து பல லட்சங்கள் சேதமடைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பொருட் சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications