ஒசூர் அம்மா உணவகங்களில், உணவுக்கான முழு செலவை ஏற்றது அதிமுக.. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிதி
ஒசூர்: ஒசூர் மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கிட முழுப்பொறுப்பையும் ஏற்றுள்ளது அதிமுக. முதல் தவணையாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆணையரிடம் வழங்கினார்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் மே 3ம் தேதி ஊரடங்கு முடியும் வரை, ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில், மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களில், ஏழை எளியோருக்கு மூன்று வேளை உணவு வழங்க முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியனிடம், முதல் தவணையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்.
இரண்டாவது கட்டமாக, 10 டன் காய்கறிகளை அம்மா உணவகத்திற்கு வழங்கிய பாலகிருஷ்ணா ரெட்டி, ஊரடங்கு முடியும் வரை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் உணவு வழங்க ஏற்படும் முழு செலவை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவிப்பு செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மாவட்ட கழக பிரதிநி சிட்டி ஜெகதீஷ், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் ராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்திவரும் அம்மா உணவகங்கள் அனைத்திலும் அதிமுக சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஒசூரிலும் விலையில்லா உணவுக்கு நிதி வழங்க அதிமுக முன்வந்துள்ளது. ஆனால், அரசின் அம்மா உணவகங்களில், அதிமுக செலவிட்டு உணவு வழங்குவது தவறான முன்னுதாரணம் என்று, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்











Click it and Unblock the Notifications