Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூரில் பல மடங்கு உயரும் நிலத்தின் மதிப்பு.. மெட்ரோ + ஏர்போர்ட்.. அண்ணாந்து பார்க்கும் பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்ததை அடுத்து, அங்குள்ள ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சி காணத் தயாராகியுள்ளது.

விமான நிலையம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, ஓசூரில் நிலவும் தேவை அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர்தெரிவித்துள்ளனர். 'Housing.com' எனும் இணையதளம், 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை தேடல்கள் குறைந்திருந்தாலும், புதிய கட்டுமானங்கள் இல்லாத போதிலும் விற்பனை சீராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

Hosur

இது, ஏற்கனவே இருக்கும் கட்டுமானங்களை உள்வாங்கும் மறைமுகத் தேவையைக் காட்டுகிறது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) அறிவிக்கப்பட்ட பிறகு, வட பெங்களூருவின் ஆரம்பகாலத்தைப் போலவே, ஓசூர் தற்போது எதிர்கால இணைப்பின் மையமாக நிலைநிறுத்தப்படுவதால், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

அடித்து தூக்கும் ஓசூர்

ஓசூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியகைப்-பாகலூர் அருகே அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வான்வெளியின் தடையற்ற மேற்பரப்பு (OLS) குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெரியகைக்கும் பாகலூருக்கும் இடையில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது. ஓசூரில் இருந்து பெரியகை 25 கி.மீ. தொலைவிலும், பாகலூர் சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இந்த குறிப்பிட்ட இடம் கர்நாடகாவில் உள்ள அத்திப்பல்லியில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்திப்பல்லி, ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாகும்.

ஓசூரில் விமான நிலையம்

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்காக அரசு நியமித்த ஆலோசகர், இரண்டு இடங்களுக்கான தடையற்ற மேற்பரப்பு (Obstacle Limitation Surfaces - OLS) ஆய்வை சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான நிலையம் அமைக்க Taneja Aerospace and Aviation Limited (TAAL) விருப்பம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம்

பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று இடங்கள் அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது. தனியாரால் இயக்கப்படும் தனிஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) விமான நிலையம் உள்ள பெலகொண்டப்பள்ளியை விட பெரியகைப்-பாகலூருக்கு OLS ஆய்வு சாதகமாக இருந்ததால், இந்த இடம் இறுதி செய்யப்பட்டது.

பெரியகைப்-பாகலூருக்கும் பெலகொண்டப்பள்ளிக்கும் இடையே சிறிய அளவிலான வேறுபாடுகளை ஆய்வு எடுத்துக்காட்டியது. எனினும் பெரியகைப்-பாகலூரே சிறந்த இடம் என அரசு கருதியதால் அந்த இடத்தை தேர்ந்தெடுத்து திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்தது. "பெலகொண்டப்பள்ளியாக இருந்திருந்தால், TAAL நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது புதிய இடம் என்பதால், பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும்" என ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்ததை அடுத்து, அங்குள்ள ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சி காணத் தயாராகியுள்ளது. பெரும்பாலான தேவை பெங்களூருவில் இருந்து வருவதாகவும், குறிப்பாக அத்திப்பள்ளி-ஓசூர் பகுதியில் மலிவு விலை நிலங்களையும், நடுத்தரப் பிரிவு வீடுகளையும் வேலை செய்யும் தொழில் வல்லுநர்கள் தேடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஓசூரின் பலம்

பெரும்பாலான மக்கள் முன்மொழியப்பட்ட விமான நிலையத்திற்கு அருகிலும், மாலூர் சாலை, ஓசூர் சாலை, மற்றும் சர்ஜாப்பூர்-எலக்ட்ரானிக் சிட்டி-அத்திப்பள்ளி கோரிடார் போன்ற முக்கிய பகுதிகளிலும் நிலம் வாங்க தீவிரமாக முயன்று வருகின்றனர். சந்தைப் போக்குகளின்படி, பெரும்பாலான வாங்குபவர்கள் மலிவு விலை மற்றும் RERA அங்கீகரிக்கப்பட்ட சொத்துக்கள், 2-3 BHK குடியிருப்புகள் மற்றும் பல பயன்பாட்டு மேம்பாடுகளை தேடுகிறார்கள்.

அத்திப்பள்ளி, பாகலூர், மற்றும் பெங்களூருவின் ஐடி மையங்கள் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகள் தற்போது முக்கிய இடங்களாக உள்ளன. அதே நேரத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே பிரீமியம் வில்லாக்கள் மற்றும் gated சமூகங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அங்கே நிலத்தின் மதிப்பு 35% உயர்ந்து உள்ளதால் பலரும் இப்போதே அங்கே நிலம் வாங்க தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விமான நிலையத்தை மையமாகக் கொண்ட பகுதிகள் வேகமாக முன்னேறி உள்ளன. பல பகுதிகள் நான்கு ஆண்டுகளில் 70-120% விலை உயர்வைப் பதிவு செய்துள்ளன. ஓசூரின் மிகப்பெரிய பலம், பெங்களூருவின் ஐடி மையங்களுக்கு அருகாமையில் இருப்பதுடன், கிழக்கு அல்லது வட பெங்களூருவை விட மிகக் குறைந்த ஆரம்ப விலையை வழங்குவதாகும்.

தமிழ்நாட்டின் சிறந்த சாலை மற்றும் இணைப்பு உள்கட்டமைப்பு அதன் மதிப்பை மேலும் அதிகரிக்கிறது. ஓசூர் பெங்களூருவுக்கு மட்டுமல்லாமல், கோவை, சூளகிரி, கிருஷ்ணகிரி, மற்றும் சென்னைக்கும் தடையற்ற இணைப்புகளைக் கொண்டுள்ளது. சென்னை 4-5 மணிநேர தூரத்தில் உள்ளது, பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை இதை மேலும் குறைக்கும். சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) சர்ஜாப்பூர், வைட்ஃபீல்ட், மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி ஆகியவற்றுக்கான பயண நேரத்தைக் குறைப்பதுடன், ஓசூரை மாலூரின் தொழில்துறை பகுதியுடனும் இணைக்கும். இதனால் இங்கே நிலத்தின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+