அடித்து ஆடும் ஸ்டாலின்.. ஓசூருக்கு என்று வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு.. ஸ்டன் ஆகி நிற்கும் பெங்களூர்
ஓசூர்: ஓசூரில் அமையவுள்ள "அறிவுசார் பெருவழித்தடத்திற்கு" ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தை உருவாக்க ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான டெண்டரை TIDCO வெளியிட்டுள்ளது.
ஓசூர் நகரை முக்கிய தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) இந்த புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஓசூரில் தொடரும் முதலீடுகள்
இந்த அறிவுசார் பெருவழித்தடம் சுமார் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், வெளிப்புற சுற்றுச் சாலை, துணைக்கோள் நகர சுற்றுச் சாலை மற்றும் முக்கிய புறவழிச் சாலைகள் வழியாகப் பரவியிருக்கும்.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை (OMR) போல, தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாக இந்த பெருவழித்தடம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களை ஓசூர் பகுதிக்கு ஈர்ப்பது TIDCO-வின் முக்கிய நோக்கமாகும்.
ஓசூர் முன்னேற்றம்
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் நவீன நகர்ப்புற வசதிகளுடன் இந்த பெருவழித்தடம் பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டதாக உருவாக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தொழில் மற்றும் அறிவுசார் வளர்ச்சி மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரிதும் உதவும்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசகர், அடுத்த 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை உருவாக்குவார். இது திட்டத்தின் மூலோபாய திசை, பிராண்டிங் மற்றும் வளர்ச்சித் துறைகளை விவரிக்கும். மேலும், நிலப் பயன்பாட்டிற்கான ஒரு விரிவான மாஸ்டர் பிளானையும் தயாரிப்பார்.
பயோடெக், ஃபின்டெக் மற்றும் கல்வி போன்ற முன்னுரிமைத் துறைகளைக் கண்டறிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசனைகள் நடத்தப்படும். திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமும் உருவாக்கப்பட்டு, இயற்பியல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பள்ளி கிராமத்தில், ஒசூர் வர்த்தக மையம் அமைக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ₹60 கோடி மதிப்பீட்டில், 27.36 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமையவுள்ளது.
இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) விரிவான ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வு முடிவடைந்த நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டமும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் வடிவமைக்கப்படவுள்ளது.
இந்த வர்த்தக மையமும், சர்வதேச விமான நிலையமும் இணைந்து ஒசூரின் ஏற்றுமதியையும், முதலீடுகளையும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒசூர் ஒரு முக்கிய தொழில்துறை மையமாக வளர்ச்சி அடையும் எனத் தெரிகிறது. ஏற்கனவே ஓசூர் நகரம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பல முக்கிய வளர்ச்சிப் பணிகள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளன. சில திட்டங்கள் கட்டுமானத்திலும் உள்ளன. கிட்டத்தட்ட பெங்களூர் நகரம் போல வளரும் வகையில் துரிதமான பணிகள் பல ஓசூரில் நடந்து வருகின்றன.
ஓசூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியகைப்-பாகலூர் அருகே அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வான்வெளியின் தடையற்ற மேற்பரப்பு (OLS) குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் விமான நிலையம்
பெரியகைக்கும் பாகலூருக்கும் இடையில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது. ஓசூரில் இருந்து பெரியகை 25 கி.மீ. தொலைவிலும், பாகலூர் சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இந்த குறிப்பிட்ட இடம் கர்நாடகாவில் உள்ள அத்திப்பல்லியில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்திப்பல்லி, ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாகும்.
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்காக அரசு நியமித்த ஆலோசகர், இரண்டு இடங்களுக்கான தடையற்ற மேற்பரப்பு (Obstacle Limitation Surfaces - OLS) ஆய்வை சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான நிலையம் அமைக்க Taneja Aerospace and Aviation Limited (TAAL) விருப்பம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications