ஹைதராபாத் அருகே 30 குரங்குகள் பலி.. விஷம் வைத்து கொலையா என விசாரணை
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 30 குரங்குகள் கூட்டமாக இறந்திருப்பதால் அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என விசாரணை நடத்தப்படுகிறது.
மகபூபாபாத் மாவட்டம் ஹில்லாக் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடப்பதை வனத்துறையினர் அறிந்தனர். கிராமத்தில் உள்ள குன்றின் மேல் இந்த குரங்குகள் இறந்து கிடந்தன.

அந்த குரங்குகளின் உடல்கள் மிகவும் சிதிலமடைந்து கிடந்தன. இதனால் பிரேத பரிசோதனை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குரங்குகள் கூட்டமாக இறந்திருப்பதால் அவை ஏதேனும் விஷம் கலந்த உணவை உண்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
விவசாயிகள் யாராவது தங்கள் பயிர்களை காப்பதற்காக விஷம் வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவிக் கொண்டே இருக்கும் குரங்குகள் தற்போது ஒரே இடத்தில் இறந்து கிடப்பதால் மக்களிடையே சோகம் நிலவியது.












Click it and Unblock the Notifications