உல்லாசத்திற்கு தடை போட்டதால் சுஜாதாவிற்கு கோபம்.. காதலனின் மனைவி, குழந்தை உயிருடன் இல்லை
ஹைதராபாத்: திருமணத்தை மீறிய உறவு என்பது ஒரு விஷச்செடி போல் படர்ந்து மொத்த குடும்பத்தையும் அழிக்கும் என்பதற்கு பல உதாரணங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். தெலுங்கானா மாநிலத்தில் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்காதலனின் மனைவி, குழந்தையை பெண் ஒருவர் இல்லாமல் செய்த சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நகேஷ். இவருடைய மனைவி மமதாவுக்கு 25 வயது ஆகிறது. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் இருந்தார்கள். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40) என்பவருடன் நகேசுக்கு நட்பும், பழக்கமும் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தெரியவந்ததால், நகேசுக்கும், மமதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சுஜாதாவுடனான தொடர்பை கைவிடுமாறு மமதா தனது கணவரை வலியுறுத்தி வந்துள்ளார். சுஜாதாவையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சுஜாதா கடும் ஆத்திரம் அடைந்தார். மமதா உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலனோடு உல்லாசம் அனுபவிக்க முடியாது என்று நினைத்த சுஜாதா, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சுஜாதா, நகேஷ் இல்லாத நேரத்தில் மமதா வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு மமதா தாய்ப்பால் கொடுத்து கொண்டு இருந்தார். உடனே தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து மமதா மீதும், குழந்தை மீதும் கண் இமைக்கும் நேரத்தில் ஊற்றி தீ வைத்தார். இதில் அலறித்துடித்த தாயும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். உடனே சுஜாதா ஓடி விட்டார்.
தீக்காயம் அடைந்த குழந்தையையும், தாயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையுடன் தாய் எரித்துக்கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications